ஹரியானா தேர்தலில் 1031 வேட்பாளர்கள் போட்டி! பாஜக, காங்கிரஸ் அதிருப்தி வேட்பாளர்கள் திடீர் வாபஸ்!
சண்டிகர்: ஹரியானா மாநில சட்டசபை தேர்தலில் 90 தொகுதிகளில் மொத்தம் 1031 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். வேட்பு மனுக்களை வாபஸ் பெற கடைசி நாளான நேற்று காங்கிரஸ், பாஜக கட்சிகளின் பல அதிருப்தி வேட்பாளர்கள் திடீரென வாபஸ் பெற்றனர். ஹரியானா சட்டசபைக்கு அக்டோபர் 5-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.
ஹரியானா சட்டசபைக்கு அக்டோபர் 5-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. ஹரியானாவில் மொத்தம் 90 சட்டசபை தொகுதிகள் உள்ளன. அனைத்து தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. அக்டோபர் 8-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்

ஹரியானாவில் 10 ஆண்டுகள் பாஜக தொடர்ந்து ஆட்சியில் இருந்து வருகிறது. ஹரியானா பாஜக ஆட்சிக்கு எதிராக அதிருப்தி அலை இருப்பதாலேயே சில மாதங்களுக்கு முன்னர் முதல்வராக இருந்த மனோகர் லால் கட்டார் மாற்றப்பட்டு நயாப் சிங் சைனி முதல்வராக்கப்பட்டார். ஹரியானா பாஜகவில் உட்கட்சி பூசலும் தலைதூக்கிக் கொண்டே இருக்கிறது.
அதேபோல ஹரியானா காங்கிரஸுக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது என கருத்து கணிப்புகள் தெரிவித்தாலும் அந்த கட்சியிலும் உட்கட்சி மோதல்கள் வெடித்துக் கொண்டுதான் இருக்கின்றன. பாஜக, காங்கிரஸ் அல்லாமல் இந்திய தேசிய லோக் தள், ஜேஜேபி, ஆம் ஆத்மி ஆகியவையும் தேர்தலில் களம் காண்கின்றன.
ஹரியானா தேர்தலில் விவசாயிகள் போராட்டம், அக்னிவீர் திட்டம் உள்ளிட்டவை முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்பது கணிப்பு.
இந்த நிலையில் ஹரியானாவில் வேட்பு மனுத் தாக்கல் முடிவடைந்துள்ளது. வேட்பு மனுத் தாக்கல் வாபஸ் பெற நேற்று கடைசி நாள். பாஜக, காங்கிரஸில் சீட் கிடைக்காத அதிருப்தியில் போட்டி வேட்பாளர்களாக மனுத் தாக்கல் செய்த பலரும் நேற்று வாபஸ் பெற்றனர். இதனையடுத்து ஹரியானாவில் 1031 பேர் வேட்பாளர்களாக களம் காண்கின்றனர்.
On 18-09-2024 08:18, Mathivanan Maran wrote:












Click it and Unblock the Notifications