சீனிவாசனுக்கு வயசு 91, மஞ்சுளாவுக்கு 84 வயசு.. தவறாமல் வாக்களிக்க வந்த சபாஷ் ஜோடி!!
மகாராஷ்டிர மாநிலம் லட்டூரில் 105 வயது மூதாட்டி வாக்களித்தார்
ஸ்ரீநகர்: "கல்யாண பொண்ணுக்கு முகத்தில் இன்னும் வெட்கம்கூட முழுமையாக போகவில்லை.. மணக்கோலத்திலேயே பூத்துக்கு வந்த அந்த புதுமண தம்பதி ஓட்டு போட்டு விட்டு சென்றனர்!
இன்று கர்நாடகம், தமிழகம், ஜம்மு காஷ்மீர், ஒடிசா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடந்து வருகிறது. இதனால் இந்த மாநிலங்களில் காலையில் இருந்தே மக்கள் நீண்ட வரிசைகளில் நின்று ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர்.
அதிலும் ஒருசிலரின் ஆர்வத்தை பார்த்தால் அடேங்கப்பா ரேஞ்சுக்கு உள்ளது. பெங்களூரு ஜெய்நகரில் ஒரு ஜோடி வாக்களிக்க வந்தது.
|
மஞ்சுளா
கணவர் சீனிவாசனுக்கு வயசு 91, மனைவி மஞ்சுளாவுக்கு 84 வயசு! இருவரும் தள்ளாடியபடியே வந்தாலும் தங்கள் ஓட்டினை சரியாக பதிவு செய்து விட்டு திரும்பினர்.
|
மூதாட்டி
இதேபோல, மராத்திய மாநிலத்தில் லாட்டூர் மக்களவை தொகுதியில் 105 வயது மூதாட்டி வாக்களிக்க வந்தார். அவர் பெயர் கவையாய் காம்ப்ளி! மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 10 மக்களவை தொகுதியில் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், ஹரங்குல் பத்ரக்சில் உள்ள சாவடிக்கு இவரை வீல் சேரில் உட்கார வைத்து கூட்டி வந்தனர்

ஒத்தை விரல்
அவரது குடும்ப உறுப்பினர்கள். பாட்டிக்கு கண் தெரிகிறதா, இல்லையா என்றுகூட நமக்கு தெரியவில்லை. கண்களை மூடியபடி இருந்தார். ஆனாலும் ஓட்டு போட்ட ஒத்தை விரலை உயர்த்தி காட்டுகிறார்.

முதுமை
இதுபோல தள்ளாமை, முதுமை, வயோதிகம் காரணமாக உடம்பில் ஆயிரத்தெட்டு பிரச்சனை இருந்தாலும், தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றுவதில் இந்த மூத்தோர்கள் உயர்ந்து நிற்கிறார்கள்.
|
வெட்கம்
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உத்தம்பூரில், ஒரு சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது. ஒரு ஜோடிக்கு இன்று காலைதான் கல்யாணம் ஆகி உள்ளது. கல்யாண பொண்ணும், மாப்பிள்ளையும் தாலி கட்டிய கையோடு ஸாரி.. வாக்கு சீட்டோடு பூத்துக்கு வந்துவிட்டனர். பெண்ணுக்கு ஓட்டு போட்டுவிட்டு திரும்பி போகும்வரை குனிந்த தலை நிமிரவே இல்லை.. வெட்கமும் விட்டு போகவில்லை!












Click it and Unblock the Notifications