For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

4 வயது சிறுமியை பலாத்காரம் செய்தவரின் சகோதரியை நிர்வாணமாக்கிய 11 பெண்களுக்கு 2 ஆண்டு சிறை

Google Oneindia Tamil News

மும்பை: மும்பையில் 4 வயது சிறுமியை பலாத்காரம் செய்த நபரின் சகோதரியை நிர்வாணமாக்கிய வழக்கில் 11 பெண்களுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2010ம் ஆண்டு மும்பை சவேரி பகுதியில் 4 வயது சிறுமியை பலாத்காரம் செய்ததாக இளைஞர் ஒருவர் கைது செய்து செய்யப்பட்டார். பலாத்காரம் தொடர்பாக ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள், கைது செய்யப்பட்ட இளைஞரின் வீட்டை முற்றுகை இட்டனர்.

பின்னர் அந்த வீட்டில் இருந்த கைது செய்யப்பட்ட இளைஞரின் 22 வயது தங்கையை அவர்கள் சரமாரியாகத் தாக்கினார். மேலும், அப்பெண்ணை நிர்வாணமாக்கி வீதியில் இழுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பான வழக்கு மும்பை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் 11 பெண்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட 11 பெண்களுக்கும் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

மேலும் பெண்களே இது போன்ற கொடிய சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது வருந்தத்தக்கது எனவும் பெண்களே இத்தகைய காரியத்தில் ஈடுபட்டாலும், இந்திய தண்டனைச் சட்டம் 354 பிரிவின்படி, மானப்பங்கப்படுத்துதல் பிரிவில் பெண்களையும் தண்டனைக்குள்ளாக்கலாம் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

English summary
Eleven women and a man have been convicted and sentenced to two years' imprisonment for assaulting a 22-year-old woman, ripping her clothes and parading her naked in Sewri in 2010.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X