ஆந்திராவில் திடீர் மழை: 12 பேர் பலி!
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்: ஆந்திராவில் நேற்று இரவு திடீரென மழை பெய்தது. இந்த கடும் மழைக்கு 12 பேர் பலியாகி உள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

ஆந்திர மாநிலத்தில் நேற்று இரவு திடீரென்று கனமழை பெய்தது.
பலத்த மழை காரணமாக 14 மாவட்டங்களில் விவசாய பயிற்கள் நீரில் மூழ்கியுள்ளதாகவும், 1,200-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
இந்த மழைக்கு 12 பேர் பலியாகியுள்ளனர். இதில், வாரங்கல் மாவட்டத்தில் 7 பேரும், நிசாமாபாத் மாவட்டத்தில் 3 பேரும், ஆனந்தப்பூர் மாவட்டத்தில் 2 பேரும் உயிரிழந்துள்ளதாக ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications