இத்தாலி டூ அமிருதசரஸ்.. 160 விமான பயணிகளில் 125 பேருக்கு கொரோனா பாசிட்டிவ்!

Subscribe to Oneindia Tamil

அமிருதசரஸ்: இத்தாலியிலிருந்து அமிருதரசஸ் வந்த விமானத்தில் 125 பயணிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 90,928 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 19,206 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.தினசரி கொரோனா பாசிட்டிவிட்டி ரேட்டானது 6.43 சதவீதமாக உள்ளது.

125 passengers from Italy to Amritsar reported Corona positive

மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2,85, 401 பேர் ஆகும். இதுவரை 148.67 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 68.53 கோடி பேருக்கு இதுவரை கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதுபோல் ஓமிக்ரானால் இந்தியாவில் இதுவரை 2,630 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதில் மகாராஷ்டிராவில் 797 பேரும் டெல்லியில் 465 பேரும், ராஜஸ்தானில் 236 பேரும், கேரளாவில் 234 பேரும் ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ராஜஸ்தானை சேர்ந்த 73 வயது முதியவர் கடந்த வாரம் ஓமிக்ரானால் உயிரிழந்தார்.

125 passengers from Italy to Amritsar reported Corona positive

கொரோனா, ஓமிக்ரானை தடுக்க விமான நிலையங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இத்தாலியிலிருந்து பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸ் நகருக்கு ஒய்யூ- 661 விமானம் நேற்று மதியம் 1.30 மணிக்கு வந்து சேர்ந்தது. இத்தாலி கொரோனா அதிகம் பரவும் ரிஸ்கான நாடுகளில் ஒன்றாகும். அந்த விமானத்தில் 179 பேர் பயணித்தனர்.

அவர்களில் 19 பேர் கைக் குழந்தைகள் என்பதால் மற்ற தகுதியுடைய 160 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 125 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. இத்தாலியின் மிலான் நகரிலிருந்து பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸிற்கு போர்ச்சுகல் நிறுவனமான ஈரோ அட்லாண்டிங் ஏர்வேஸ் விமானம் இயக்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+