மேற்கு வங்கத்தில் சாலையில் பஸ் கவிழ்ந்து விபத்து: 13 பேர் பலி - 30 பேர் காயம்
லக்னோ: மேற்கு வங்கத்தில் மற்றொரு பேருந்தை முந்திச் செல்ல முயன்ற பேருந்து ஒன்று சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 13 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்கள்.
மேற்கு வங்க மாநிலம் குத்குரி கிராமத்தைச் சேர்ந்த மக்கள் மூன்று பேருந்துகளில் நாதியா மாவட்டம் மாயாபூர் கிராமத்திற்கு சென்றிருந்தனர். பேருந்துகள் பர்த்வான் - காத்வா சாலையில் தேவாந்திகி என்ற கிராமத்தின் அருகில் சென்று கொண்டிருந்தது. அப்போது மூன்று பேருந்துகளும் ஒன்றை ஒன்று முந்த முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது.
இதில், நிலை தடுமாறிய பேருந்து ஒன்று சாலையில் கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 13 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். சுமார் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
பயணிகளின் அலறல் சத்தம் கேட்டு விரைந்து வந்த கிராம மக்கள் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். சிகிச்சைப் பெற்று வருபவர்களில் மூன்று பேரின் நிலைமைக் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி. மேலும், காயமடைந்தவர்களின் மருத்துவ செலவினங்களை அரசே ஏற்கும் எனவும் அறிவிக்கப் பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications