For Daily Alerts
Just In
ஜார்க்கண்ட் பரிதாபம்- ஆளில்லா ரயில்வே கேட்டினை கடக்க முயன்ற கார் மீது ரயில் மோதி 13 பேர் பலி!
ராம்நகர்: ஜார்க்கண்ட் மாநிலம் ராம்கர் மாவட்டம் புர்குண்டாவில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற கார் மீது ரயில் மோதிய விபத்தில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ராம்கர் மாவட்டம், புர்குண்டாவில் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற மோது வேகமாக வந்த ரயில் கார் ஒன்றின் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.
ரயில் மோதிய வேகத்தில் கார் முழுவதுமாக உருக்குலைந்தது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே காரில் பயணித்த 13 பேர் பரிதாபமாக பலியாகினர். இந்த விபத்தில் இறந்தவர்களில் 5 குழந்தைகளும் அடக்கம்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் உடல்களைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த கோர விபத்து குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகின்றது. இந்தியாவில் கிட்டதட்ட 15,000 ஆளில்லா ரயில்வே கேட்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
English summary
A speeding train rammed into an SUV at an unmanned railroad crossing in eastern India killing all 13 people in the vehicle, police said Tuesday.
Story first published: Tuesday, December 8, 2015, 14:08 [IST]