தொடங்கியது தேர்தல் திருவிழா! மகாராஷ்டிரா, ஹரியானாவில் களங்களும் காட்சிகளும் மாறுமா?
Subscribe to Oneindia Tamil
டெல்லி: மகாராஷ்டிரா, ஹரியானாவில் தேர்தல் திருவிழா தொடங்கிவிட்டது. 2 மாநிலங்களிலுமே காங்கிரஸ் ஆட்சி என்பதால் ஆட்சியைக் கைப்பற்ற மத்தியில் ஆளும் பாஜக பகீரதபிரயத்தனம் மேற்கொள்ளும்.
மகாராஷ்டிராவில் 288 தொகுதிகளுக்கும் ஹரியானாவில் 90 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.

மகாராஷ்டிரா நிலவரம்:
- 1999 ஆம் ஆண்டு முதல் காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி அரசு நடைபெற்று வருகிறது.
- இம்மாநிலத்தில் மொத்தம் உள்ள 48 லோக்சபா தொகுதிகளில் பாஜக 23 ஐயும் அதன் கூட்டணிக் கட்சியான சிவசேனா 18 தொகுதிகளையும் கைப்பற்றியது.
- இங்கு காங்கிரஸ் கட்சிக்கு 2 லோக்சபா தொகுதிகள் மட்டுமே கிடைத்தன
- காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு இன்னமும் இறுதியாகவில்லை.
- இதேபோல் பாஜக- சிவசேனா இடையே இன்னமும் தொகுதிப் பங்கீடு நிறைவடையவில்லை.
ஹரியானா நிலவரம்:
- ஹரியானாவில் காங்கிரஸ் கட்சியின் பூபேந்தர்சிங் ஹூடா முதல்வராக இருக்கிறார்.
- இம்மாநிலத்தில் ஓம் பிரகாஷ் சவுதாலாவின் இந்திய தேசிய லோக் தள் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கிறது.
- இதே ஹரியானாவில் பஜன் லால் மகன் தலைமையிலான ஹரியானா ஜன்ஹித் காங்கிரஸும் முக்கிய கட்சி. இக்கட்சி 3 ஆண்டுகாலம் பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தது.
- லோக்சபா தேர்தலில் மொத்தம் உள்ள 10 தொகுதிகளில் 7 ஐ பாஜக கைப்பற்றியது. இந்திய தேசிய லோக் தள் 2 இடங்களையும் ஆளும் காங்கிரஸ் ஒரு தொகுதியைத்தான் கைப்பற்றியது.












Click it and Unblock the Notifications