அருணாச்சலபிரதேசத்தில் பெரும் நிலச்சரிவு.. 14 பேர் உயிரோடு புதைந்தனர்
Subscribe to Oneindia Tamil
இடாநகர்: அருணாச்சல பிரதேசத்தில் நேற்று திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் 14 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
அருணாச்சலபிரதேசம் பாபம் பரே மாவட்டத்தில் லேப்டாப் கிராமத்தில் நேற்று பிற்பகல் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் 14 பேர் மண்ணில் சிக்கிக்கொண்டனர். அவர்கள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

நிலச்சரிவு குறித்து தகவல் அறிந்த மீட்புக் குழுவினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த சில நாட்களாக அங்கு கனமழை கொட்டி வருகிறது. இதன் காரணமாக, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அஸ்ஸாம் மாநிலத்தை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications