"டபுள் ஓட்டு" போடுவதாக கூறி.. 14 தமிழர்களை தடுத்த பாஜகவினர்.. கேரளாவில் பரபரப்பு..!
14 தமிழர்களை பாஜகவினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
இடுக்கி: கேரளாவில் துக்கம் விசாரிக்கச் சென்ற 14 தமிழர்களை தடுத்த பாஜகவினர், அவர்கள் இரட்டை வாக்கு செலுத்தப் போவதாக கூறி பிரச்சினையை ஏற்படுத்தினர். இதையடுத்து அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இடுக்கி மாவட்டமானது தமிழக எல்லையில் உள்ள கேரளப் பகுதியாகும். இங்கு தமிழர்கள் பெருமளவில் வசிக்கின்றனர். அவர்களில் பலருக்கு கேரளாவில் ஓட்டுரிமை உள்ளது. சிலருக்கு தமிழகத்தில் ஓட்டுரிமை உள்ளது. தேர்தல் சமயத்தில் இரு பக்கமும் ஓட்டுப் போடுவதும் வழக்கம்தான்.

இந்த நிலையில் இன்று தமிழகத்திலும், கேரளாவிலும் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இதனால் இரட்டை ஓட்டுப் போட பலர் முயல்வதாக அரசியல் கட்சிகள் குறிப்பாக பாஜகவினர் குற்றம் சாட்டிக் கொண்டுள்ளனர். இதுதொடர்பாக கேரள ஹைகோர்ட்டிலும் ஒரு வழக்குப் போட்டு எல்லையை மூட வேண்டும் என்று கோரினர். ஆனால் ஹைகோர்ட் அதை மறுத்து விட்டது.
இந்த நிலையில் இன்று இடுக்கி மாவட்டம் உடும்பன்சோலை அருகே உள்ள நெடும்கண்டம் என்ற இடத்தில் தமிழகப் பகுதி நோக்கிச் சென்று கொண்டிருந்த 14 தமிழர்களை பாஜகவினர் மடக்கினர். அவர்கள் இரட்டை வாக்கு செலுத்தப் போவதாக கூறி புகார் கூறினர். தகவல் அறிந்து போலீஸார் விரைந்து வந்தனர்.
14 பேரிடமும் விசாரித்தபோது உடும்பன்சோலையில் ஒரு துக்க வீட்டுக்குச் சென்று கொண்டிருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர். ஆனால் பாஜகவினர் அதை மறுத்து இவர்கள் இரட்டை வாக்கு செலுத்த செல்வதாகவும், அழியாத மையை அழிக்க உதவும் கெமிக்கல் மற்றும் பஞ்சு இவர்களிடம் இருந்ததாகவும் கூறினர். இதையடுத்து 14 பேரையும் போலீஸார் காவலல் நிலையம் கூட்டிச் சென்று விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications