For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உ.பி.: உறவினர் பலாத்காரம் செய்ததால் 6 மாத கர்ப்பிணியான 14 வயது சிறுமி

உத்தரப்பிரதேசத்தில் உறவினர் ஒருவர் பலாத்காரம் செய்ததால் 14 வயது சிறுமி ஒருவர் 6 மாத கர்ப்பிணியானார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் உறவினர் ஒருவர் பலாத்காரம் செய்ததால் 14 வயது சிறுமி ஒருவர் 6 மாத கர்ப்பிணியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சண்டீகரில் 14 வயது சிறுமியும் அவரது பெற்றோரும் கூலி வேலை செய்து வந்தனர். இந்நிலையில் உ.பி.யில் உள்ள சொந்த ஊரான உன்னவ் பகுதியில் இந்த சிறுமி 1 மாதத்துக்கு மேல் தங்கியிருந்தார்.

14 year old girl raped by relative in UP

அவரை அவரது உறவுக்காரர் ஒருவர் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அந்த சிறுமிக்கு அடிவயிற்றில் வலி ஏற்பட்டது. பின்னர் அவரைஅருகில் உள்ள மருத்துவமனைக்கு அவரது பெற்றோர் அழைத்து சென்றனர்.

இதில் அந்த சிறுமி 6 மாத கர்ப்பிணியாக உள்ளது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து மருத்துவர்கள் போலீஸுக்கு புகார் அளித்தனர். அதன்பேரில் அந்த நபரை தேடி வருகின்றனர்.

உன்னவ் பகுதியில் 14 வயது சிறுமியை பாஜக எம்எல்ஏ ஒருவர் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில் அதே பகுதியில் மற்றொரு சம்பவம் நடைபெற்றது.

English summary
A 14 year old girl allegdes raped by distant relative in her native village.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X