உ.பி.யில் பயங்கரம்: 15 வயது சிறுமி பலாத்காரம் செய்ய முயன்று எரித்துக் கொலை
பரேலி: உத்தர பிரதேச மாநிலத்தில் வீட்டில் தனியாக இருந்த 15 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற 6 பேர் அவரை தீ வைத்து எரித்தனர். இதில் படுகாயம் அடைந்த சிறுமி சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிர் இழந்தார்.
உத்தர பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் உள்ள ஷாஜஹான்பூரைச் சேர்ந்த சிறுமி கடந்த 17ம் தேதி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த 6 வாலிபர்கள் வீடு புகுந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றனர். ஆனால் சிறுமி அவர்களை எதிர்த்து போராடவே அவர்கள் கோபம் அடைந்தனர். அவர்கள் சிறுமி மீது வீட்டில் இருந்த மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பியோடிவிட்டனர்.
இதில் படுகாயம் அடைந்த சிறுமி ஷாஜஹான்பூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் பரேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரின் நிலைமை மோசமானது. இதையடுத்து அவர் ரோஹில்கந்த் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை இரவு உயிர் இழந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 4 பேரை கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள 2 பேரை தேடி வருகிறார்கள்.
தாத்தா, பாட்டி வீட்டில் வளர்ந்த சிறுமி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தான் பெற்றோருடன் சேர்ந்து வசிக்கத் துவங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்!












Click it and Unblock the Notifications