For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஹலோ போலீஸ்.. அம்மாவின் "நெற்றிப்பொட்டை" குறி வைத்த 16 வயது மகன்.. பாசமே கிடைக்கலையாம்.. அலறிய ம.பி.

மத்திய பிரதேசத்தில் 16 வயது சிறுவன், தன்னுடைய அம்மாவை கொன்றுள்ளார்

Google Oneindia Tamil News

போபால்: 16 வயது சிறுவன் தன் தாயை கொன்றுவிட்டு, போலீசுக்கு போன் செய்து தகவல் அளித்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது.

மத்தியப் பிரதேசத்தின் திகம்கர் நகரை சேரந்தவர் ரமேஷ் ராஜக்.. இவர் ஒரு பேங்க்கில் செக்யூரிட்டியாக வேலைபார்த்து வருகிறார். இவருக்கு 16 வயதில் ஒரு மகன் இருக்கிறார்கள்.

கடந்த திட்கட்கிழமை வழக்கம்போல், ரமேஷ் டியூட்டிக்கு சென்றுவிட்டார்.. அப்போது மகனும், மனைவியும் மட்டும் வீட்டில் இருந்தனர்.. ஏதோ தவறு செய்துவிட்டான் என்பதற்காக, 16 வயது மகனை அவரது அம்மா திட்டியுள்ளார்.

 சுருண்ட தாய்

சுருண்ட தாய்

இதனால், ஆத்திரமடைந்த சிறுவன், வீட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்துவந்து அம்மாவை சுட்டுவிட்டான்.. இதில் அந்த தாய், ரத்தவெள்ளத்தில் சுருண்டு விழுந்தார்.. துப்பாக்கிக்கான லைசென்ஸை பெற்று, வீட்டில் வைத்திருந்திருக்கிறார் ரமேஷ்.. அந்த துப்பாக்கியை எடுத்து, தாயை சுட்டுவிட்டான் சிறுவன்.. இதற்கு பிறகு, அந்த சிறுவனே போலீசுக்கு போனை போட்டு, தன் அம்மாவை சுட்டுவிட்டேன் என்று தகவல் தந்துள்ளார்.. இதைக்கேட்டு அதிர்ந்து போன போலீசார், விரைந்து சம்பவ இடத்திற்கு வந்தார்கள்.. அதுவரை பயந்து எங்கும் ஓடிவிடாமல் சிறுவன், அங்கேயே போலீசுக்காக காத்திருந்தார்..

அன்பில்லை

அன்பில்லை

போலீசார், அந்த பெண்ணின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்... அங்கு டாக்டர்கள் அவரை பரிசோதனை செய்தபோது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக சொன்னார்கள்.. இதுகுறித்து போலீசார் சிறுவனிடம் விசாரித்தனர்.. அப்போது சிறுவன் சொல்லும்போது, "என் அம்மா என்கிட்ட அடிக்கடி சண்டை போடுறாங்க.. என்னை எப்பவுமே திட்டிக் கொண்டு இருக்கிறார்.. என்மீது அன்பு காட்டுவதே கிடையாது.. காரணமே இல்லாமல் என்னை அடிக்கடி அடிப்பார்.. அதனால்தான், ஆத்திரத்தில் என் அம்மாவை சுட்டுக் கொன்றேன் என்று வாக்குமூலம் தந்திருக்கிறான்..

 அம்மா பாசம்

அம்மா பாசம்

இப்போது போலீசார் சிறுவனிடம் இருந்து துப்பாக்கியை பறிமுதல் செய்துள்ளனர்.. சிறுவனை பற்றி சொல்லும்போது, 16 வயது சிறுவனுக்கு, தன்னுடைய தாய் தன்னிடம் அன்பாக இல்லை என்ற கோபம் நீண்ட நாட்களாக இருந்துள்ளது. தன் அண்ணனிடம் மட்டும் அம்மா பாசம் காட்டுவதாகவும், தன்னிடம் பாசம் காட்டவில்லை என்று அடிக்கடி வீட்டில் சண்டை போட்டு வந்துள்ளார்.. இதன் காரணமாக அவருக்கு சிறிது மனநிலை பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. அத்துடன் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களுக்கும் அடிமையாக இருந்த சிறுவன், தன்னுடைய அம்மாவை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார்" என்றனர்.

 ரூம் ஃப்ரெஷ்னர்

ரூம் ஃப்ரெஷ்னர்

16 வயது சிறுவன் தாயைச் சுட்டுக்கொலை செய்த சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படித்தான், கடந்த ஜுன் மாதமும் உத்தரபிரதேசத்தில், இதுபோலவே ஒரு சம்பவம் நடந்தது.. அந்த சிறுவனுக்கும் 16 வயதுதான்.. எப்போது பார்த்தாலும் இந்த சிறுவன் செல்போனில் வீடியோகேம் விளையாடி கொண்டேயிருப்பாராம்.. இதை அவரது அம்மா கண்டித்துள்ளார்.. இதனால் ஆத்திரமடைந்த சிறுவன், வீட்டில் வைத்திருந்த உரிமம் பெற்ற துப்பாக்கியால், அம்மாவை சுட்டுக்கொன்றுவிட்டார்.. பிறகு, சடலத்தை 2 நாள் வீட்டுக்குள்ளேயே வைத்திருந்தார்.

நெற்றிப்பொட்டு

நெற்றிப்பொட்டு

துர்நாற்றம் வீசாமல் இருக்க, வீடு முழுக்க ரூம் ஃபிரெஷ்னரை பயன்படுத்தியிருக்கிறார்.. அத்துடன், 9 வயது தங்கையையும், இந்த கொலை பற்றி யாரிடமும் சொல்லக் கூடாது என்று மிரட்டி வைத்திருந்த நிலையில், போலீசார் உண்மையை வெளிக்கொண்டு வந்தார்கள்.. இந்த சிறுவனின் அப்பா ஒரு ராணுவ வீரர் என்பது கூடுதல் தகவல் ஆகும்... இது தொடர்பான விசாரணைகளும் நடந்து வரும்நிலையில், இன்னொரு சிறுவனும் தாயை கொன்றுள்ளார்.. தன் அம்மாவின் தலையிலேயே குறி பார்த்து சுட்டாராம்.. மத்திய பிரதேசத்தில் நடந்துள்ள இந்த சம்பவம் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

English summary
16 year old boy shoots his mother dead and claims she did not love him
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X