For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 17 பேர் சாவு

By Veera Kumar
Google Oneindia Tamil News

ஜம்மு: பள்ளத்தில் பஸ் கவிழ்ந்ததில் 17 பேர் உயிரிழந்த பரிதாப சம்பவம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடந்துள்ளது.

காஷ்மீர் பள்ளத்தாக்குக்கு சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்டோரை ஏற்றிக்கொண்டு பஸ் ஒன்று இன்று காலை சென்றுகொண்டிருந்தது. ராம்பன் மாவட்டம் ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் பஸ் சென்றபோது டிக்டோல் என்ற இடத்தில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், மலை சரிவின் பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பஸ்சில் பயணித்த 17 பேர் உயிரிழந்தனர். மேலும் 34 பேர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்ப்டடுள்ளனர். தகவலறிந்ததும் ராணுவத்தினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

17 killed, 34 injured as passenger bus plunges into gorge

காயமடைந்து உயிருக்கு போராடியவர்கள் மீட்பு ஹெலிகாப்டர்கள் மூலமாக ஜம்முவிலுள்ள தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பஸ்சில் இருந்த பயணிகள் பலரும் பூஞ்ச், ராஜவுரி மாவட்டங்களையும், சிலர் குஜராத் மாநிலத்தையும் சேர்ந்தவர்கள்.

17 killed, 34 injured as passenger bus plunges into gorge
English summary
Seventeen people were killed and 27 injured when a bus going to the Kashmir Valley fell into a deep gorge in the Jammu region Tuesday, an official said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X