டெல்லியில் பயங்கரம்... 17 வயது சிறுமி சுட்டுக்கொலை... பாய் பிரண்டே சுட்டுக் கொன்றார்...
டெல்லியில் 17 வயது சிறுமி தனது நண்பரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். தலைமறைவாக உள்ள கொலையாளியை போலீசார் தேடி வருகின்றனர்.
டெல்லி : நஜகார் பகுதியில் 17 வயது சிறுமி ஒருவர் தனது நண்பரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார. இந்த சம்பவம் அப்பகுதியில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நஜகார் பகுதியைச் சேர்ந்த 17வயது சிறுமி ஒருவர் தனது நண்பர் சுபம் மற்றும் யோகேஷுடன் மதிய உணவுக்காக காரில் வெளியே சென்றார். அங்குள்ள ஹோட்டலில் மதிய உணவை முடித்த 3 பேரும் பின்னர் ரஜோரி கார்டனுக்கு சென்றுள்ளனர்.
மாலை 7 மணியளவில் சிறுமியின் தாயார் போன் செய்து வீட்டிற்கு வரும்படி கூறியுள்ளார். இதையடுத்து இரவு 9 மணி அளவில் வீட்டிற்கு அருகில் சென்றபோது அந்த சிறுமி காரிலிருந்து கீழே இறங்கியுள்ளார்.
அப்போது காரில் இருந்த யோகேஷின் உரிமம் பெற்ற துப்பாக்கியை எடுத்த மற்றொரு நண்பரான சுபம் அவரை சரமாரியாக சுட்டார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அந்த சிறுமி அங்கேயே உயிரழந்தார்.
மகளின் வருகைக்காக காத்திருந்த சிறுமியின் தாய் துப்பாக்கிச்சுடும் சத்தம் கேட்டு ஓடி வந்து பார்த்தார். அப்போது தனது மகள் இரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மருத்துவமனையில் அவரை ஆய்வு செய்த அதிகாரிகள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். துப்பாக்கிச்சூட்டில் இருந்து தப்பிப்பதற்காக யோகேஷ் காரில் இருந்து வெளியேறியதால் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் துப்பாக்கி மற்றும் காரை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள சுபத்தை தேடி வருகின்றனர். உயிரிழந்த சிறுமிக்கு யோகேஷ் நேற்றுதான் அறிமுகமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.