அதிகாலையில் கோர விபத்து.. 18 பேர் உடல் நசுங்கி பலி! உ.பியில் சோகம்.. பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் உன்னாவ் பகுதியில் ஏற்பட்ட சாலை விபத்தில் 18 பேர் பலியாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு பிரதமர் மோடி நிவாரணம் அறிவித்திருக்கிறார்.
உத்தரப் பிரதேசம் மாநிலம் ஆக்ரா-லக்னோ எஸ்க்பிரஸ் சாலையில் பால் லாரி ஒன்று நின்றிருக்கிறது. இந்நிலையில் இன்று காலை சுமார் 5 மணியளவில் அந்த வழியாக வந்த தனியார் சொகுசு பேருந்து லாரி மீது அதிவேகத்துடன் மோதியுள்ளது. இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே 19 பேர் உயிரிழந்தனர். விபத்தை நேரில் பார்த்தவர்கள், படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள உத்தரப் பிரதேச போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில் பேருந்தில் பயணித்தவர்கள் பீகார் மாநிலம் மோதிஹாரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்திருக்கிறது.
இதனையடுத்து இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்திருக்கிறார். மேலும் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விபத்து குறித்து,

"உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ்வில் நடந்த சாலை விபத்து நெஞ்சை பதற வைக்கிறது. இந்த துயரமான நேரத்தில், இந்த பயங்கர விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். உள்ளூர் நிர்வாகம் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
அதேபோல குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவும் தனது இரங்கலை தெரிவித்திருக்கிறார். "உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவில் லக்னோ-ஆக்ரா விரைவு சாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் பலர் உயிரிழந்த செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும்" என்று x தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.

இந்த விபத்து குறித்து அகிலேஷ் யாதவ் யோகி ஆதித்யநாத் அரசு மீது அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார். "நெடுஞ்சாலையில் பார்க்கிங் வசதி செய்து கொடுக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் ஏன் பால் வாகனம் சாலையில் நிறுத்தப்பட்டிருந்தது? சாலையில் நிற்கும் வாகனங்களை கண்காணித்து, அதை அங்கிருந்து அப்புறப்படுத்த சிசிடிவி கேமிரா பொருத்தப்பட்டிருக்குமே? அது என்ன ஆனது?
நெடுஞ்சாலை போலீசார் ஏன் ரோந்து பணியில் ஈடுபடவில்லை? விபத்து நடந்த பின்னர் மீட்பு பணிக்காக வரும் ஆம்புலன்ஸ்கள் ஏன் குறிப்பிட்ட நேரத்தில் வரவில்லை?" என்று கேள்வி எழுப்பி மாநில அரசு மீது குற்றம்சாட்டியுள்ளார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications