தானே: வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் பலாத்காரம் ;துணிக்கடை ஊழியர் தலைமறைவு
தானே: மகாராஷ்டிரா மாநிலம் தானேயில் வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்து விட்டு தப்பியோடிய துணிக்கடை ஊழியரைப் போலீசார் தேடி வருகின்றனர்.
தானே, கல்யாண் வித்தல்வாடி பகுதியை சேர்ந்தவர் மங்கேஷ் மெத்ரே (வயது25). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு துணிக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
அதே பகுதியை சேர்ந்த 18 வயது இளம்பெண்ணின் பெற்றோர் துக்க நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள தங்கள் சொந்த ஊருக்கு சென்று விட்டனர்.
இதனால் அந்த இளம்பெண் வீட்டில் தனியாக இருந்தார். இதை தெரிந்து கொண்ட மங்கேஷ் மெத்ரே அந்த பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அந்த பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்தார். இதே போன்று கடந்த மே மாதம் 18-ந் தேதி முதல் இந்த மாதம் 6-ந் தேதி வரையிலும் பெற்றோர் வீட்டில் இல்லாத சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தினமும் அந்த பெண்ணை அவர் பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது. இதை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாக அந்த பெண்ணை மங்கேஷ் மெத்ரே மிரட்டி உள்ளார்.
இந்த நிலையில், தொல்லை தாங்க முடியாத அந்த பெண் தனக்கு நேர்ந்த கொடுமையை பெற்றோரிடம் கூறி அழுதாள். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கல்யாண் கோல்சேவாடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதுபற்றி அறிந்ததும் மங்கேஷ் மெத்ரே தலைமறைவாகி விட்டார். போலீசார் வழக்குப்பதிவு அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications