பெரிய கொடுமை.. 18 வயது பெண்ணை பலாத்காரம் செய்து.. காட்சியை "லைவாக" ஒளிபரப்பிய நபர்
போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் போபாலில் 18 வயது பெண்ணை பலாத்காரம் செய்து அதை நேரலையாக நண்பனுக்கும் அனுப்பிய விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் குவாலியரை சேர்ந்தவர்கள் விவேக் யாதவ் (25) மற்றும் லாலு சாஹு (25). இவர்கள் இருவரும் 18 வயது பெண்ணுடன் நட்பாக பழகி வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அந்த பெண்ணை இருவரும் தனியாக ஒரு இடத்திற்கு வர சொல்லியுள்ளனர். அப்போது தங்களுடயை ஆசைக்கு இணங்குமாறு தெரிவித்துள்ளனர்.

பெண்
இதையடுத்து அந்த பெண் மறுக்கவே அந்த பெண்ணிடம் அவரது தந்தையையும் சகோதரனையும் கொன்றுவிடுவோம் என மிரட்டியுள்ளனர். இந்த நிலையில் அந்த பெண்ணை லாலு ஹோட்டல் அறைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு அந்த பெண்ணை லாலு பலாத்காரம் செய்துள்ளார்.

பலாத்காரம்
அப்போது பலாத்காரத்தை லைவ் வீடியோவாக தனது நண்பர் விவேக்கிற்கும் அனுப்பியுள்ளார். விவேக் லைவில் பலாத்காரத்தை பார்க்கும் போது ஸ்கிரீன்ஷாட்டுகளை எடுத்து வைத்துள்ளது தெரியவந்தது. இந்த வீடியோவை வைத்து அந்த பெண்ணை மிரட்டி இருவரும் பல முறை பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

பெண்ணுக்கு நிச்சயதார்த்தம்
பின்னர் அந்த பெண்ணுக்கு அவரது வீட்டில் வேறு ஒருவருடன் நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது. இதை அறிந்த லாலுவும் விவேக்கும் அந்த பெண்ணை மிரட்டியுள்ளனர். மேலும் அந்த பெண்ணை பலாத்காரம் செய்த வீடியோவை அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளவிருந்த நபருக்கு அனுப்பியுள்ளனர்.

அதிர்ச்சி
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள மறுத்துள்ளார். பின்னர்தான் அந்த பெண், இருவரால் தனக்கு நேர்ந்த கொடுமைகளை தாய், தந்தையரிடம் கூறி அழுதுள்ளார். பின்னர் அவர்கள் போலீஸில் புகார் அளித்ததை அடுத்து அந்த இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தலைமறைவாக உள்ள லாலு, விவேக்கை தேடி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications