Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சீன எல்லையில் சாலை.. 19 இந்திய தொழிலாளர்கள் மாயம்! 2 வாரமாக நீடிக்கும் மர்மம் -அருணாச்சலில் பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

இடாநகர்: அருணாசல பிரதேசத்தில் சீனா எல்லையில் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 19 இந்திய தொழிலாளர்கள் காணாமல் போயிருப்பது பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

அருணாச்சல பிரதேசத்தில் இந்தியா - சீனா எல்லை கட்டுப்பாட்டு பகுதி அருகே அமைந்துள்ள குருங் குமே மாவட்டத்தில் சாலை அமைக்கும் பணியில் 19 தொழிலாளர்கள் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

தலைநகர் இடாநகரில் இருந்து 300 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள டாமின் வட்டம் அருகே கடந்த 2 வாரங்களுக்கு முன் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இவர்கள் மாயமானதாக கூறப்படுகிறது.

சீன எல்லையில் சாலை

சீன எல்லையில் சாலை

அசாமை சேர்ந்த 19 தொழிலாளர்கள் அருணாசல பிரதேசம் வந்து சாலை கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், அவர்கள் காணாமல்போனதாக ஒப்பந்ததாரர் காவல் நிலையத்தில் புகாரளித்து இருக்கிறார். BRO எனப்படும் எல்லையோர சாலைகள் அமைப்பு சார்பில் சாலை அமைக்கப்படும் பகுதியில் உள்ள தொழிலாளர்கள் முகாம்களில் இருந்து இவர்கள் 19 பேரும் கடந்த ஜூலை 5 ஆம் தேதி வெளியேறியதாக கூறப்படுகிறது.

காவல் நிலையத்தில் புகார்

காவல் நிலையத்தில் புகார்

அசாம் சென்று குடும்பத்துடன் பக்ரீத் பண்டிகை கொண்டாடுவதற்கு ஒப்பந்ததாரர் அனுமதி வழங்காததால் அவர்கள் அங்கிருந்து சென்றதாக சக தொழிலாளர்கள் தெரிவித்து உள்ளனர். ஒப்பந்ததாரர் அளித்த புகாரின் அடிப்படையில் கடந்த ஜூலை 13 ஆம் தேதி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. ஆனால், அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று காவல்துறை இணை ஆணையர் நிகே பெங்கியா தெரிவித்துள்ளார்.

சடலம் கண்டெடுப்பு

சடலம் கண்டெடுப்பு

"அங்குள்ள நதி ஒன்றில் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பகிரப்பட்டு வருகின்றன. அதை உறுதிபடுத்துவதற்காக எங்கள் உயரதிகாரிகளை அனுப்பி இருக்கிறோம். காணாமல்போன பகுதி உயர்ந்த மலைகளையும், அடர்ந்த காடுகளையும் கொண்டது. எனவே தேடுதல் வேட்டையை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள். சீன எல்லையில் உள்ள பின் தங்கிய கிராம பகுதிகளை இணைப்பதற்காக இந்த சாலை அமைக்கப்பட்டது.

ஒப்பந்ததாரர் மீது வழக்கு

ஒப்பந்ததாரர் மீது வழக்கு

சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்த இடம் டாமின் வட்டத்திலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவு கொண்டது." என அவர் கூறி இருக்கிறார். டாமின் பகுதி சீன எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதிலிருந்து 80 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. 19 தொழிலாளர்கள் மாயமானது தொடர்பாக அவர்களை அருணாச்சல பிரதேசம் அழைத்து வந்த துணை ஒப்பந்ததாரர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து இருக்கிறது.

அசாமிலும் புகார்

அசாமிலும் புகார்

மாயமான 19 தொழிலாளர்களும் அசாம் மாநிலத்தின் எல்லை பகுதியான கொக்ராஜ்ஹர் மற்றும் துப்ரியை சேர்ந்தவர்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம் அசாமின் பிலசிபரா பகுதியை சேர்ந்த 7 தொழிலாளர்களை காணவில்லை என ஜூன் மாதம் அவரது குடும்பத்தினர் புகாரளித்துள்ளனர். இவர்களை கடந்த மே 30 ஆம் தேதி ரெஜாவுல் இஸ்லாம் என்பவர் இடாநகருக்கு பணிக்காக அழைத்து சென்றதாவும், அதன் பின் தொழிலாளர்கள் தங்களுடன் தொடர்பில் இல்லை என்றும் உறைனர்கள் தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+