கேரளத்தில் அடங்க மறுக்கும் கொரோனா... இரண்டு பள்ளிகளில் 190 மாணவர்கள், 70 ஆசிரியர்களுக்கு பாதிப்பு!
மலப்புரம்: கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள 2 அரசுப்பள்ளிகளில் 190 மாணவர்கள் மற்றும் 70 ஆசிரியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஒரு மாணவருக்கு கொரோனா ஏற்பட்டு இருந்தது. தற்போது அவர் மூலம் அனைவருக்கும் பாதிப்பு பரவியுள்ளது. இதையடுத்து 2 பள்ளிகளும் மூடப்பட்டன.

இந்தியாவில் ஒரு ஆண்டுக்கும் மேலாக கொரோனா ஆட்டம் காட்டி வருகிறது. தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் கொரோனா பாதிப்பு ஓரளவு குறைந்து விட்டது. ஆனால் மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு தொடர்ந்து அதிகமாக உள்ளது. அதிலும் நமது அண்டை மாநிலமான கேரளாவில் தினமும் 6,000-க்கும் மேல் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள 2 அரசுப்பள்ளிகளில் 190 மாணவர்கள் மற்றும் 70 ஆசிரியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மலப்புரம் மாவட்டத்தில் உள்ள , மரஞ்சேரி மேல்நிலைப்பள்ளியின் 150 மாணவர்கள் மற்றும் 34 ஆசிரியர்களுக்கு கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது. மலப்புரத்தின் பொன்னானியில் உள்ள வன்னேரி மேல்நிலைப் பள்ளியின் 39 மாணவர்களுக்கும், 36 ஆசிரியர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஒரு மாணவருக்கு கொரோனா ஏற்பட்டு இருந்தது. தற்போது அவர் மூலம் அனைவருக்கும் பாதிப்பு பரவியுள்ளது. இதையடுத்து 2 பள்ளிகளும் மூடப்பட்டன. கிருமிநாசினி மூலம் இந்த் பள்ளிகள் சுத்தம் செய்யப்பட்ட உள்ளது. மாணவர்களிடம் முககவசங்களின் பயன்பாடு, வெப்ப நிலை பரிசோதனையை கண்டிப்பாக கடைபிடிக்க கண்காணிக்க வேண்டும் என்று பள்ளி அதிகாரிகளிடம், மாவட்ட சுகாதார அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications