Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வனப் பகுதியில் பதுங்கிய தீவிரவாதிகள்.. ஜம்மு காஷ்மீரில் பயங்கர மோதல்.. 4 இராணுவ வீரர்கள் வீரமரணம்!

Subscribe to Oneindia Tamil

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடைபெற்ற மோதலில் இந்திய ராணுவத்தை சேர்ந்த 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக உளவுத் துறையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து, கடந்த 19ஆம் தேதி ராணுவத்தின் சிறப்புப் படையினரும், காவல்துறையினரும் இணைந்து கூட்டு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

2 Army Officers, 2 Soldiers die fighting terrorists in Jammu and Kashmir

அந்தப் பகுதியில் தீவிரவாதிகளின் நடமாட்டம் உறுதியானதை தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடந்து வருகிறது. ரஜோரி பகுதியில் நடைபெற்று வரும் இந்த என்கவுன்டரில் இந்திய ராணுவ வீரர்கள் நால்வர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 2 பேர் ராணுவ வீரர்கள், 2 பேர் அதிகாரிகள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மோதலில் தீவிரவாதிகள் காயமடைந்து உள்ளதாகவும், அவர்களை ராணுவத்தின் சுற்றி வளைத்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த பகுதியில் பதுங்கியுள்ள பயங்கரவாதிகளைப் பிடிக்க தேடுதல் வேட்டை தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பிர் பஞ்சால் வனப்பகுதி, கடந்த சில ஆண்டுகளாக பாதுகாப்பு படையினருக்கு சவாலாக உள்ளது. பயங்கரவாதிகள் அடர்ந்த காடுகளை பயன்படுத்தி தங்கள் இருப்பிடங்களை மறைத்து பதுங்கி வாழ்ந்து வருகின்றனர்.

கடந்த வாரம், ரஜோரி மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+