பஞ்சாபில் சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பு: 2 பேர் பலி; 4 பேர் படுகாயம்
Subscribe to Oneindia Tamil
ஹோசியார்பூர்: பஞ்சாப் மாநிலத்தில் குண்டு வெடித்ததில் ஒரு பெண் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
பஞ்சாப் மாநிலம் ஹோசியார்பூரை அடுத்த சாஸ்திரிநகரில் உள்ள ஒரு பாலத்தின் அருகே சிலர் பயன்படுத்தப்பட்ட கையெறி குண்டுகளில் இருந்து பித்தளையை பிரித்தெடுக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது சக்தி வாய்ந்த ஒரு குண்டு வெடித்து சிதறியது.

இதில் அங்கு பித்தளை பொருட்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு பெண் உள்பட 2 பேர் உடல் சிதறி பலியானார்கள். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயமடைந்தவர்களை அருகில் இருந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்த போலீசாரும் அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications