ஐஎன்எஸ் விக்ரமாதித்யா போர்க் கப்பலில் விஷவாயு தாக்கி இருவர் பலி
Subscribe to Oneindia Tamil
கார்வார்: ஐ.என்.எஸ்.,விக்ரமாதித்யா போர் கப்பலில் விஷ வாயு தாக்கியதில் ஊழியர்கள் இரண்டு பேர் பரிதாபமாக பலியாகினர்.
இந்திய கடற்படையின் மிகப்பெரிய போர் கப்பல்களில் ஒன்றானது ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா போர் கப்பல். இந்த கப்பலை பழுது பார்க்கும் பணி கர்நாடக மாநிலம் கார்வார் பகுதியில் நடைப்பெற்று வந்தது.

அப்போது கப்பலின் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை இருந்து வாயு கசிவு தொடர்பான பணியில் ஈடுப்பட்டு இருந்த ஊழியர்கள் ராகேஸ் குமார், மாலுமி மோகன்தாஸ் கோலம்ப்கர் ஆகியோர் விஷ வாயு தாக்கி பலியானதாக இந்திய கப்பல் படையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர். இது குறித்து கடற்படை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்












Click it and Unblock the Notifications