தெருவோரத்தில் வாழ்ந்த முன்னாள் ராணுவ தளபதி அடித்து கொலை.. புனேவில் பயங்கரம்
புனேவில் தெருவோரத்தில் வாழ்ந்த முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டு இருக்கிறார்.
புனே: புனேவில் தெருவோரத்தில் வாழ்ந்த முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டு இருக்கிறார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. போலீசார் இதுகுறித்து தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.
இவரை தாக்கியது யார் என்று இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. அதேபோல் என்ன காரணம் என்றும் கூறப்படவில்லை.

யார் இவர்
மரணம் அடைந்த ராணுவ வீரர் பெயர் ரவீந்திர பாலி. 67 வயது நிரம்பிய இவர் புனே நகரை சேர்ந்தவர். இவர் இந்திய ராணுவத்தில் 90 களில் ராணுவ தளபதியாக இருந்துள்ளார்.

பிரச்சனை
இவருக்கு சரியாக பென்சன் வழங்கப்படவில்லை. வீட்டில் சண்டையிட்டுவிட்டு புனேவில் தெருவோரத்தில் வசித்து வந்துள்ளார். அங்கு இருக்கும் வீடுகளில் பிச்சை எடுக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

மரணம்
இவர் அங்கு இருந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்களால் தாக்கப்பட்டுள்ளார். இதனால் இவர் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்து இருக்கிறார். இவரை தாக்கியவர்கள் உடனடியாக அங்கிருந்து மறைந்துள்ளனர்.

சாட்சி
இவர் எதற்காக தாக்கப்பட்டார் என்ற தகவல் இன்னும் தெரிவிக்கப்படவில்லை. அங்கு இருந்த வீடு ஒன்றின் வாட்ச்மேன் இதுகுறித்து சாட்சி அளித்துள்ளார். போலீசார் அவர்கள் இரண்டு பேரையும் தீவிரமாக தேடிவருகின்றனர்.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications