தெருவோரத்தில் வாழ்ந்த முன்னாள் ராணுவ தளபதி அடித்து கொலை.. புனேவில் பயங்கரம்

புனேவில் தெருவோரத்தில் வாழ்ந்த முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டு இருக்கிறார்.

Subscribe to Oneindia Tamil

புனே: புனேவில் தெருவோரத்தில் வாழ்ந்த முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டு இருக்கிறார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. போலீசார் இதுகுறித்து தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.

இவரை தாக்கியது யார் என்று இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. அதேபோல் என்ன காரணம் என்றும் கூறப்படவில்லை.

யார் இவர்

யார் இவர்

மரணம் அடைந்த ராணுவ வீரர் பெயர் ரவீந்திர பாலி. 67 வயது நிரம்பிய இவர் புனே நகரை சேர்ந்தவர். இவர் இந்திய ராணுவத்தில் 90 களில் ராணுவ தளபதியாக இருந்துள்ளார்.

பிரச்சனை

பிரச்சனை

இவருக்கு சரியாக பென்சன் வழங்கப்படவில்லை. வீட்டில் சண்டையிட்டுவிட்டு புனேவில் தெருவோரத்தில் வசித்து வந்துள்ளார். அங்கு இருக்கும் வீடுகளில் பிச்சை எடுக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

மரணம்

மரணம்

இவர் அங்கு இருந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்களால் தாக்கப்பட்டுள்ளார். இதனால் இவர் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்து இருக்கிறார். இவரை தாக்கியவர்கள் உடனடியாக அங்கிருந்து மறைந்துள்ளனர்.

சாட்சி

சாட்சி

இவர் எதற்காக தாக்கப்பட்டார் என்ற தகவல் இன்னும் தெரிவிக்கப்படவில்லை. அங்கு இருந்த வீடு ஒன்றின் வாட்ச்மேன் இதுகுறித்து சாட்சி அளித்துள்ளார். போலீசார் அவர்கள் இரண்டு பேரையும் தீவிரமாக தேடிவருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+