இந்திய விமானப்படை தாக்குதலில்... 2 பாக். ராணுவத்தினர் பலி.. தீவிரவாதிகள் கூண்டோடு காலி!
டெல்லி: இந்திய விமானப்படையும், ராணுவமும் இணைந்து நேற்று இரவு பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் நடத்திய அதிரடித் தாக்குதலில் பல தீவிரவாதிகள் கூண்டோடு கொல்லப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. இதில் 2 பாகிஸ்தான் ராணுவத்தினரும் கொல்லப்பட்டுள்ளனர்.
நேற்று இரவு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு அருகே உள்ள தீவிரவாதி முகாம்களைக் குறி வைத்து விமானப்படையும், ராணுவமும் அதிரடித் தாக்குதலில் ஈடுபட்டன. இதில் பாகிஸ்தானிலிருந்து கொண்டு இயங்கி வந்த தீவிரவாதிகள் கூண்டோடு கொல்லப்பட்டனர். தீவிரவாத முகாம்களும் பெரும் சேதத்தை சந்தித்துள்ளன.

பாகிஸ்தான் பகுதிக்குள் நடந்துள்ள இந்தத் தாக்குதலால் பாகிஸ்தான் அதிர்ச்சி அடைந்துள்ளது. அதேசமயம் கொல்லப்பட்ட அத்தனை பேரும் தீவிரவாதிகள் என்பதால் அதற்கு என்ன செய்வது என்றும் தெரியவில்லை. இந்த அதிரிடி் தாக்குதலில் 2 பாகிஸ்தான் ராணுவத்தினரும் கொல்லப்பட்டுள்ளனர்.
2003ம் ஆண்டு ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பிறகு பல முறை பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்தத்தை மீறி நடந்து வந்தது. தொடர்ந்து துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டு வந்தது. ஆனால் இந்திய ராணுவம் பொறுமை காத்து வந்தது. ஆனால் பதன் கோட் விமான தளத்திலும், பின்னர் சமீபத்தில் யூரி ராணுவ நிலையிலும் தீவிரவாதிகள் நடத்திய பெரும் தாக்குதல் இந்தியாவை கொந்தளிக்க வைத்து விட்டது.
இதையடுத்து பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. இந்த நிலையில்தான் நேற்று இரவு அதிரடியாக பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களைக் குறி வைத்து இந்திய விமானப்படையும், ராணுவமும் இணைந்து தாக்கின. இதில் பல தீவிரவாதிகள் கொல்லப்பட்டு விட்டனர். பாகிஸ்தான் ராணுவத்த தரப்பில் இருவர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
20க்கும் மேற்பட்ட ஊடுறுவல்களும் முறியடிப்பு
இதேபோல எல்லைப் பகுதியில் 20க்கும் மேற்பட்ட தீவிரவாத ஊடுறுவல் முயற்சிகளையும் முறியடித்துள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது.
-
போதையில் பாகிஸ்தான் அமைச்சர் செய்த காரியம்? மிக பெரிய போர் வெடித்திருக்கும்.. அலட்சியத்தின் உச்சம் -
போரால் முடியாததை பேச்சுவார்த்தையில் கேட்குது அமெரிக்கா.. எப்படி சம்மதிக்க முடியும்.. ஈரான் விளக்கம் -
கிளைமாக்ஸ் இல்லாத இஸ்லாமாபாத் ‘த்ரில்லர்’: ரிட்டர்ன் ஆன ஜே.டி. வேன்ஸ்.. ஈரான் போர் முடியாது? -
உச்சக்கட்ட பரபரப்பில் பாகிஸ்தான்.. ஈரான் - அமெரிக்க தலைகள் லிஸ்ட் ரெடி.. யாரெல்லாம் வராங்க? -
திடீரென அமெரிக்க துணை அதிபர் விமானத்தை சூழ்ந்த போர் விமானங்கள்.. பாகிஸ்தான் வான் எல்லையில் பரபரப்பு! -
உலகமே தேடும் பாகிஸ்தானின் செரீனா ஹோட்டல்.. ஈரான் அமெரிக்கா பேச்சுவார்த்தைக்கு தேர்வானது எப்படி? -
அமெரிக்கா - ஈரான் மீட்டிங்: மீடியேட்டராக இருக்கும் பாகிஸ்தானுக்கு என்ன லாபம்..? பெரிய லிஸ்ட் இருக்கு -
நடுவில் பாகிஸ்தானை வைத்து.. ஈரானிடம் பேச்சுவார்த்தையை தொடங்கியது அமெரிக்கா! அடுத்து என்ன நடக்கும்? -
ஈரான் -அமெரிக்கா பேச்சுவார்த்தை! டெல்லிக்குக் கிடைக்காத பவர் பிளே! பாகிஸ்தான் தட்டி சென்றது எப்படி -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
லெபனானில் அமைதி திரும்பும் வரை பேச்சுவார்த்தை கிடையாது.. டிரம்பை சாய்த்த ஈரான்.. மிரண்ட பாகிஸ்தான் -
பாகிஸ்தானுக்கும், அமெரிக்காவுக்கும் பல்பு கொடுக்கும் ஈரான்.. ஒரே கண்டிஷன் - டிரம்ப்-க்கு அடுத்த செக்












Click it and Unblock the Notifications