29,000 அடி.. நடுவானில் நேருக்கு நேர் வந்த விமானங்கள்.. 400 பயணிகள்.. டிக் டிக் நிமிடங்கள்!
கொல்கத்தாவில் நடு வானில் இரண்டு விமானங்கள் நேருக்கு நேர் மோதும்படி வந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கொல்கத்தா: கொல்கத்தாவில் நடு வானில் இரண்டு விமானங்கள் நேருக்கு நேர் மோதும்படி வந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பொதுவாக சாலைகளில் டிராபிக் ஏற்படுவது போலவே ஆகாயத்திலும் டிராபிக் ஏற்படுவது வழக்கம். ஒரே நேரத்தில் வானத்தில் நூற்றுக்கணக்கான விமானங்கள் பறப்பது வழக்கம்.
இந்த விமானங்கள் ஒன்றோடு ஒன்று மோதாமல் இருக்க விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகள், தொடர்ந்து வழிகாட்டி வருவார்கள். ரேடார் உள்ளிட்ட பல நவீன தொழில்நுட்பம் மூலம் இதை அவர்கள் செய்வார்கள். இந்த நிலையில்தான் இதில் சிறிய பிசகு ஏற்பட்டு இருக்கிறது.
[காற்றில் பறக்கிறது ட்ரம்ப்பின் மானம்.. பேபி பலூனில் அழுமூஞ்சு அதிபரின் முகம்]

இரண்டு விமானம்
கொல்கத்தாவில் இருந்து டார்ஜிலிங்கில் உள்ள பக்தோக்ரா விமான நிலையத்துக்கு இண்டிகோ விமானம் ஒன்று சென்றுள்ளது. அதே நேரத்தில் அதற்கு எதிர் திசையில் ஏர் ஏசியா விமானம் வந்துள்ளது. இரண்டு விமானத்தையும் சேர்த்து சுமார் 400 பயணிகள் பயணித்து இருக்கிறார்கள்.

அருகருகே வந்தது
இந்த இரண்டு விமானமும் தவறுதலாக 29 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து இருக்கிறது. அதாவது இரண்டு விமானமும் எதிர் எதிர் திசையில், ஒரே உயரத்தில், ஒரே நேரத்தில் வந்துள்ளது. வேகமாக வந்த இரண்டு விமானமும் அருகருகே நெருங்கி உள்ளது. போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகளின் தவறான வழிகாட்டுதல் காரணமாக இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அசாத்தியம்
ஆனால் விமானம் அருகருகே வந்தவுடன் இரண்டு விமானத்தின் விமானிகளும் சுதாரித்தனர். இந்த மாதிரி சமயங்களில் சத்தமாக ஒலியெழுப்ப ''ஹார்ன்'' ஒன்றும், சிக்னல் ஒன்றும் பயன்படுத்தப்படும். இரண்டு விமானமும் அந்த சிக்னலை எழுப்பி இருக்கிறது. இதன் காரணமாக, அந்த விமானங்கள் கடைசி நேரத்தில் வேறு வேறு திசைக்கு திருப்பப்பட்டது.

விசாரணை
இதன் காரணமாக மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. விமானத்தில் இருக்கும் பயணிகள் அனைவரும் நலமுடன் இருப்பதாக தகவல் வந்துள்ளது. இந்த சம்பவம் எப்படி நடந்தது என்று விசாரிக்கப்பட்டு வருகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications