காலைக் கடன் கழித்த பெண்களை போட்டோ எடுத்த ஐஏஎஸ் அதிகாரிகள் டீம்.. வெடித்த சர்ச்சை!
மும்பை: ஸ்வச் பாரத் திட்டத்தின் மீதான வெறி, வேறு லெவலுக்கு போய்விட்டது மகாராஷ்டிராவில் என்பதை நிரூபிக்கிறது, சமீபத்தில் நடந்த ஒரு சர்ச்சைக்குரிய சம்பவம்.
நல்லது செய்கிறோம் என நினைத்து, நாடே தூற்றும் காரியத்தை செய்துவிட்டனர் அங்குள்ள அதிகாரிகள். ஸ்வச் பாரத் திட்டத்தை திறம்பட செயல்படுத்த ஒவ்வொரு மாநிலங்களும் ஒவ்வொரு வகையான முயற்சிகளை எடுக்கின்றன.
ஜார்க்கண்ட் மாநிலத்தில், பொது இடத்தில் மலம் கழிக்கும், ஆண்களின், லுங்கிகள் அவிழ்க்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்ட சம்பவம் சில தினங்களுக்கு முன்பு சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

பெண்களுக்கு வரவேற்பு
இப்போது மகாராஷ்டிராவில், பெண்களுக்கு ஒரு அவமரியாதை இழைக்கப்பட்டுள்ளது. ஏழை, கூலித்தொழிலாளி பெண்கள் இருவர் திறந்த வெளியில் மலம் கழித்துவிட்டு வந்தபோது அவர்களை வழிமறித்த அதிகாரிகள், மாலையிட்டு 'வரவேற்பு' அளித்ததோடு, போட்டோவும் எடுத்துள்ளனர்.

ஐஏஎஸ் அதிகாரி மீது குற்றச்சாட்டு
மகாராஷ்டிரா மாநிலம், சோலாப்பூர் அருகேயுள்ள கிராமம் ஒன்றில் இந்த சம்பவம் நடந்துள்ளது. காலை கடன் முடித்துவிட்டு வந்தவர்களை வீட்டுக்கு கூட செல்லவிடாமல் நடுவிலேயே வழி மறித்து, ஐஏஎஸ் அதிகாரியயான ராஜேந்திர பாருத் தலைமையிலான அதிகாரிகள் இப்படி ஒரு செயலில் ஈடுபட்டுள்ளனர்.

சுய உதவி குழு மீது பழி
இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், ராஜேந்திர பாருத், தனக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை என தெரிவித்துள்ளார். உள்ளூர் சுய உதவி குழுதான், இதுபோல அந்த பெண்களை அவமானப்படுத்தியதாக அவர் கூறியுள்ளார்.

சட்டத்தின்கீழ் தண்டிக்கலாம்
சோலாப்பூர் தொகுதி எம்எல்ஏ பிரணிதி ஷிண்டே இச்சம்பவத்தால் கோபமடைந்துள்ளார். சம்மந்தப்பட்ட அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்ய அவர் கோரிக்கைவிடுத்துள்ளார். இதுபோன்ற படத்தை எடுத்ததற்காக தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்கீழ் அதிகாரியை தண்டிக்க வேண்டும் என்று தெரிவித்தார் அவர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications