பஞ்சாபில் பள்ளத்தில் மினி டிரக் கவிழ்ந்து விபத்து: 20 பேர் பலி, 40 பேர் காயம்
ஹோசியார்பூர்: பஞ்சாப் மாநிலத்தில் யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற மினி டிரக் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் பலியாகினர்.
மினி டிரக் ஒன்றில் யாத்ரீகர்கள் இமாச்சல பிரதேசத்தில் உள்ள சின்த்புரி கோவிலுக்கு புனித யாத்திரை சென்றனர். அவர்கள் அங்கிருந்து பஞ்சாப் மாநிலம் கபுர்தலா மாவட்டத்தில் உள்ள பெகோவலுக்கு சென்று கொண்டிருந்தனர்.
அந்த டிரக் பஞ்சாப் மாநிலம் ஹோசியார்பூர் அருகே உள்ள மங்குவால் கிரமாத்தில் இன்று காலை சென்று கொண்டிருக்கையில் பிரேக் வேலை செய்யவில்லை. இதையடுத்து வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்தது.
இதில் டிரக்கில் இருந்த யாத்ரீகர்களில் 13 பெண்கள், 4 குழந்தைகள் உள்பட 20 பேர் பலியாகினர். மேலும் 40 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மினி டிரக்கில் அளவுக்கு அதிகமாக ஆட்கள் ஏற்றிச் செல்லப்பட்டுள்ளனர்.
உலகிலேயே இந்தியாவில் தான் மிகவும் மோசமான சாலைகள் உள்ளன. இதனால் ஆண்டுதோறும் 110,000 பேர் சாலை விபத்துகளில் பலியாகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications