மாணவியை மிரட்டி ஆறு மாதங்களாக பாலியல் பலாத்காரம்... இளைஞர் கைது
மும்பை: கல்லூரி மாணவியை மிரட்டி கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக பாலியல் பலாத்காரம் செய்து வந்த மாணவனை போலீசார் கைது செய்தனர்.
மும்பையிலுள்ள தாராவி பகுதியைச் சேர்ந்தவன் நவுஷத் ஜப்பார், இவன் மும்பை புறநகர் பகுதியான பந்த்ராவில் உள்ள கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறான்.
அதே கல்லூரியில் படிக்கும் தாராவியைச் சேர்ந்த மாணவியும், நவுஷத்தும் கடந்த ஒரு வருடமாக நண்பர்களாக பழகி வந்ததனர். இதையடுத்து கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு, அந்த மாணவியின் அந்தரங்கப் புகைப்படங்கள் தன்னிடம் இருப்பதாகக் கூறிய நவுஷத், மாணவியை தனது ஆசைக்கு இணங்க வேண்டும் என்றும், மறுத்தால் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவேன் என்று கூறி மிரட்டியுள்ளான். அதையடுத்து, அவனது ஆசைக்கு இணங்கிய அந்த மாணவியை கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக நவுஷத் பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளான்.
இந்நிலையில், அவனுடைய சித்திரவதை நாளுக்கு நாள் அதிகரித்ததையடுத்து, நடந்ததை தனது தாயாரிடம் அந்த மாணவி கூறினார். உடனே மாணவியின் தாயார் நவுஷத் மீது கேர்வாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதையடுத்து, விசாரணை மேற்கொண்ட போலீசார் மாணவன் நவுஷத்தை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications