1.5 கோடி ஏழை குடும்பங்களுக்கு இலவச காஸ் இணைப்பு: மாதந்தோறும் இலவசம் இல்லை!
டெல்லி: நாடு முழுவதும் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் ஒன்றரை கோடி குடும்பத்திற்கு புதிதாக இலவச காஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கப்படும் என்று 2016-17ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார். அதேநேரம், மாதா மாதம் வாங்கும் சிலிண்டர்கள் பணம் கொடுத்தே வாங்கப்பட வேண்டும்.
இதுகுறித்து அவர் பட்ஜெட் உரையில் கூறியது: விறகு அடுப்பை எரிக்கும்போது, அதில் இருந்து கிளம்பும் புகை, ஒரு மணி நேரத்தில் 400 சிகரெட்டுகளில் இருந்து வெளியாகும் புகைக்கு ஈடானது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

இப்படிப்பட்ட புகையை சுவாசித்து நமது கிராமத்து பெண்கள், ஏழை குடும்பத்தார் கஷ்டப்படுவதை தடுக்க இலவச காஸ் சிலிண்டர் இணைப்புக்காக ரூ.2000 கோடியை ஒதுக்கீடு செய்கிறேன்.
வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள 1.50 கோடி குடும்பங்கள் இதனால் பலன்பெறும். குடும்பத்தின் பெண் உறுப்பினர்கள் பெயரில் காஸ் இணைப்பு வழங்கப்படும். காஸ் சிலிண்டர் சப்ளை மூலமாக கிராமப்புற இளைஞர்களுக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும்.
பிரதமரின் வேண்டுகோளை ஏற்று இதுவரை 75 லட்சம் பேர் காஸ் மானியத்தை திருப்பியளித்துள்ளனர். அவர்களின் பெருந்தன்மை நாட்டிற்கு பெருமை. இவ்வாறு ஜெட்லி தெரிவித்தார்.
நாடு முழுவதும் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் ஒன்றடை கோடி குடும்பத்திற்கு இலவச காஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கப்படும் என்று 2016-17ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார்.
இந்த அறிவிப்பின்படி, சிலிண்டர் இணைப்புக்காக முதலில் வழங்கப்படும் வைப்புத்தொகை உள்ளிட்ட செலவீனங்கள் மட்டுமே மிச்சமாகும். மாதா மாதம் வாங்கும் சிலிண்டர்களுக்கு பணம் செலுத்தியாக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்?












Click it and Unblock the Notifications