சல்மான்கான் விடுதலையை எதிர்த்து கார் விபத்தில் பலியானவரின் மகனும் உச்சநீதிமன்றத்தில் அப்பீல்
மும்பை: கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில் பாலிவுட் நடிகர் சல்மான்கானை மும்பை உயர்நீதிமன்றம் விடுதலை செய்ததை எதிர்த்து இறந்து போனவரின் மகனும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
பாலிவுட் நடிகர் சல்மான் கான் கடந்த 2002 ம் ஆண்டு குடிபோதையில் காரை ஓட்டியதில் நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது கார் ஏறியது.
இதில் தூங்கிக் கொண்டிருந்த ஒருவர் பலியானார். 4 பேர் காயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து போதையில் காரை ஓட்டிச்சென்று விபத்தை ஏற்படுத்தியதாக நடிகர் சல்மான் கான் மீது வழக்கு தொடரப்பட்டது.

13 ஆண்டுகள்
13 ஆண்டுகள் நடைபெற்ற இந்த வழக்கில் கடந்த டிசம்பர் மாதம் சல்மான் கானுக்கு ஆதரவாக மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இது நாடு முழுவதும் சர்ச்சையுமானது.
மகாராஷ்டிரா அரசு அப்பீல்
இவ்வழக்கில் சல்மான்கான் விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதன் மீதான விசாரணை வரும் 12-ந் தேதி நடைபெற உள்ளது.
குடும்பமும் மேல்முறையீடு
இந்நிலையில் சல்மான்கான் விடுதலை செய்ததை எதிர்த்து இறந்து போன ஷைக் நூருல்லா ஷாபிக்கின் மகன் பைரோஸ் சேக் சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
இம்மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையும் வரும் 12-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications