அடுத்தடுத்து மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்ட சோதனைகள்.. 'இஸ்ரோ' தலைவர் சோமநாத்
ஶ்ரீஹரிகோட்டா: நடப்பு புத்தாண்டில் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்ட சோதனைகள் மேற்கொள்ளப்படும் என இஸ்ரோ தலைவர் சோமநாத் தெரிவித்துள்ளார்.
2024ம் ஆண்டின் முதல் செயற்கைக்கோளான எக்ஸ்போ சாட் செயற்கைக்கோள் பிஎஸ்எல்வி சி 58 ராக்கெட் மூலம், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து நேற்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்த செயற்கைக்கோள் பூமியிலிருந்து 650 கிலோமீட்டர் சுற்றுவட்டப் பாதையில் துல்லியமாக நிலை நிறுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்தார். எக்ஸ்ரே போலாரிமீட்டர் செயற்கைக் கோள் இந்தியாவின் முதலாவது எக்ஸ்ரே வகை செயற்கைக் கோளாகும். இது பூமியின் கருந்துளை பற்றிய ஆய்வுகளை நடத்தும்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சோமநாத், 2024 ம் ஆண்டு இஸ்ரோ பல்வேறு விண்வெளித் திட்டங்களை செயல்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தார். குறிப்பாக மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் பல்வேறு கட்ட சோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றும், தேவையான அனைத்து பரிசோதனைகளும் சரியாக அமையும் பட்சத்தில் 2025 ம் ஆண்டு ககன்யான் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
இஸ்ரோவும் அமெரிக்காவின் நாசாவும் இணைந்து நிசார் எனும் செயற்கைகோளை செலுத்த இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். குறைந்தது மாதத்திற்கு ஒரு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும் வகையில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்த அவர், இந்த எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் தமிழ்நாட்டின் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் இஸ்ரோ தலைவர் சோமநாத் தெரிவித்தார்.
விண்ணில் செலுத்தப்பட்ட ராக்கெட்டில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள லால் பகதூர் சாஸ்திரி தொழில்நுட்ப நிறுவனத்தின் அனைத்து மகளிர் குழுவினரால் உருவாக்கப்பட்ட சிறிய செயற்கைக்கோளும் விண்ணில் செலுத்தப்பட்டது. வீசாட் என பெயரிடப்பட்ட அந்த செயற்கைக் கோளை, கேரள அரசின் 'மாணவர் செயற்கைக்கோள்' திட்டத்தின் கீழ் வடிவமைத்துள்ளனர்.
தங்களுடைய அறிவியல் திறன்களையும் ரோபாட்டிக் செயல்பாடுகளையும் மெருகேற்ற உதவும் வகையில் இன்றைய நிகழ்வை நேரில் காண அனுமதித்ததன் வாயிலாக உதவி புரிந்தமைக்கு திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அரசினர் மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்தனர். இவர்கள் மத்திய அரசின் திறன் இந்தியா திட்டத்தின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கான அடல் டிங்கரிங் ஆய்வகம் திட்டத்தின் மூலம் பயிற்சி பெறுகின்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications