ஓட்டு போடவும் தெரியாத எம்.பிக்கள்.. குடியரசு தலைவர் தேர்தலில் 21 செல்லாத வாக்குகளாம்!
டெல்லி: இன்று நடைபெற்ற குடியரசு தலைவர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது, 21 எம்.பிக்கள் வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டன. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டின் 14வது குடியரசு தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 17ம் தேதி நடைபெற்றது. தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ராம்நாத் கோவிந்த்தும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் மீராகுமாரும் போட்டியிட்டனர்.

இன்று மாலை 3.30 மணியளவில் வெளியான ததகவல்படி, ராம்நாத் கோவிந்த் 369576 வாக்குகள் பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதாவது 522 எம்.பிக்கள் வாக்களித்திருந்தனர் அவருக்கு. அதேநேரம், மீரா குமாருக்கு 225 எம்.பிக்கள் வாக்களித்தாக அறிவிக்கப்பட்டது. இதன் மதிப்பு 159300 ஆகும்.
21 எம்.பிக்களின் வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டிருந்தது. இவர்களுக்கு வாக்களிக்க தெரியவில்லையா, வேண்டுமென்றே இப்படி செய்தனரா என்பது புரியவில்லை. இவ்வாறு செல்லாத வாக்களித்த எம்.பிக்கள் யார், யார் என்ற தகவல் வெளியிடப்படவில்லை.












Click it and Unblock the Notifications