ஆந்திரா: கோதாவரி ஆற்றில் வேன் கவிழ்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 22 பேர் பலி!!
திருப்பதி: ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி அருகே கோதாவரி ஆற்றில் வேன் கவிழ்ந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 22 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்த 23 பேரைக் கொண்ட பக்தர்கள் குழு ஒரு வேன் மூலம் அனந்தபுரம் திரும்பிக்கொண்டிருந்தனர். ராஜமுந்திரியில் தவ்லேஸ்வரம் அணைக்கட்டு அருகே வந்த போது வேன் நிலை தடுமாறியது.

வேன் டிரைவர் வேனை நிறுத்த செய்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. வேன் தலைகீழாக கோதாவரி ஆற்றில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் வேனில் பயணித்த 9 பெண்கள், 7 குழந்தைகள் உட்பட 22 பேர் பலியாயினர்.
உயிரிழந்த அனைவரின் உடல்களும் மீட்கப்பட்டு விசாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து நடந்தது பற்றி விசாரணை மேற்கொள்ள ஆந்திரா மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார்.
விபத்து குறித்து கேள்விப்பட்ட ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சித்தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி அதிர்ச்சி தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அவர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
இந்த விபத்து குறித்து கருத்து கூறியுள்ள ராஜமுந்திரி நகர டி.எஸ்.பி அம்பிகா பிரசாத், அதிகாலை 5.30 மணிக்கு விபத்து நடைபெற்றது; அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். திருப்பதிக்கு சென்று விட்டு திரும்பியுள்ளனர். 14 பேர் மட்டுமே செல்லக்கூடிய வேனில் 23 பேர் பயணித்ததே விபத்துக்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக என்றார்.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications