மறக்க முடியுமா...? அந்த கருப்பு நாளை..! #MumbaiTerrorAttack
மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலின் 9ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது.
மும்பை: பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலின் 9ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது.
கடந்த 2008ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி பாகிஸ்தானை சேர்ந்த லஸ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் மும்பையில் கொடூர தாக்குதலை நடத்தினர்.
நாட்டின் வர்த்தக தலைநகரான மும்பைக்குள் கடல் மார்க்கமாக நுழைந்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் 10 பேர் தாஜ் ஹோட்டல், நாரிமன் இல்லம், சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.

166 பேர் பலி
சுமார் 3 நாட்கள் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் போலீஸ் அதிகாரிகள், அப்பாவி பொதுமக்கள், வெளிநாட்டு பயணிகள் உட்பட 166 பேர் உயிரிழந்தனர். 300க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

யாரும் மறந்துவிட முடியாது
மும்பை நகரை ரத்தகளமாக்கி இந்தியாவையே அதிரவைத்த அந்தநாளை யாரும் எளிதில் மறந்துவிட முடியாது. இதில் பலியான மற்றும் காயம் அடைந்தவர்களின் குடும்பத்தினர் நெஞ்சில் இன்றளவும் ஆறா தழும்பாய் உள்ளது இந்த தாக்குதலின் தாக்கம்.

9வது ஆண்டு நினைவு தினம்
அந்த கொடூர தாக்குதலின் 9வது ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதில் தங்களின் உறவுகளை பறிகொடுத்தவர்கள் அவர்களுக்கு கனத்த இதயத்துடன் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

குடியரசுத் தலைவர் இரங்கல்
தீவிரவாத தாக்குதல் நடந்த இடங்களில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது. இதனை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் மும்பை தாக்குதலில் பலியான குடும்பத்தினருக்கு தனது இரங்கலை செய்துள்ளார்

உறுதியேற்போம்..
இந்நாளில் அனைத்து வடிவங்களிலும் தீவிரவாதத்தை ஒழிக்க உறுதியேற்போம் என்றும் நம்முடைய மக்கள், நாடு, உலகம் பாதுகாப்பாக இருக்க உறுதியேற்போம் என்றும் குடியரசுத் தலைவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications