கலைஞர் டி.வி.க்கும் எங்களும் தொடர்பு இல்லை: கோர்ட்டில் ஆ.ராசா, கனிமொழி மறுப்பு!
டெல்லி: ரூ.200 கோடி பண பரிவர்த்தனை நடந்தபோது, கலைஞர் டி.வி.க்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி ஆகியோர் மறுத்துள்ளனர்.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெற்றதற்காக ஸ்வான் நிறுவனம் கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி வழங்கியதாக புகார் கூறப்பட்டது. இது தொடர்பான வழக்கு டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கின் இன்றைய விசாரணையின் போது கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி பண பரிவர்த்தனையில் கூறப்படும் குற்றச்சாட்டுக்கு ஆ.ராசா, கனிமொழி ஆகியோர் மறுப்பு தெரிவித்தனர்.
ஆ.ராசா கூறுகையில, 'கலைஞர் தொலைக்காட்சிக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை' என்றார். கனிமொழி எம்.பி. கூறுகையில், 'பணப்பரிவர்த்தனை நடந்ததாக கூறப்படும்போது நான் கலைஞர் டி.வி.யில் எந்த பதவியிலும் இல்லை. கலைஞர் டி.வி. பங்குகளைளை சினியுக் பிலிம்சுக்கு விற்பதற்கான கூட்டத்திலும் நான் பங்கேற்கவில்லை. கலைஞர் டி.வி. இயக்குநரக கூட்டத்தில் 3 முறை மட்டுமே பங்கேற்றுள்ளேன் என்றார்.












Click it and Unblock the Notifications