பொக்ரானில் ரூம் போட்டு மர்ம ஆலோசனை.. 2 சவூதிக்காரர்கள் உள்பட 3 பேர் கைது
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் பொக்ரான் நகரில் சாட்டிலைட் போனுடன் சந்தேகத்திற்கிடமான வகையில் ஹோட்டலில் தங்கியிருந்த 2 சவூதி நாட்டவர்கள் உள்பட 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இவர்கள் சமூக நல்லிணக்கத்தையும், அமைதியையும் சீர்குலைக்க திட்டமிட்டிருந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட இரு சவூதி நபர்களின் பெயர்கள் அல் தலால் முகம்மது மற்றும் அல் சமரி முகம்மது என்று தெரிய வந்துள்ளது. இவர்களுக்கு 40 வயது இருக்கும். 3வது நபரின் பெயர் சையத் மோஷின். 41 வயதான இவர் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர்.

பொக்ரானில் உள்ள ஒரு ஹோட்டலில் 3 பேரும் தங்கியிருந்Lனர். இவர்கள் குறித்து போலீஸாருக்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து ஜெய்சால்மர் மாவட்ட போலீஸார் விரைந்து சென்று கைது செய்ததாக மாவட்ட எஸ்பி கெளரவ் யாதவ் கூறியுள்ளார்.
இவர்கள் சாட்டிலைட் போன் வைத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முறையான அனுமதி இல்லாமல் இந்தியாவில் சாட்டிலைட் போன் வைத்திருக்க தடை உள்ளது.












Click it and Unblock the Notifications