மே.வங்கத்தில் பெருமளவு பணத்துடன் சிக்கிய ஜார்க்கண்ட் காங். எம்எல்ஏக்கள்- ஆட்சியை கவிழ்க்க பாஜக சதி?
ஹவுரா: மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் பெருமளவு பணத்துடன் ஜார்க்கண்ட் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா- காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கவிழ்க்கும் பாஜகவின் சதிதான் இதன் பின்னணியில் இருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி உள்ளது.
மேற்கு வங்க மாநில ஆசிரியர் நியமன தேர்வு முறைகேடு ஒட்டுமொத்த நாட்டையே அதிரவைத்துக் கொண்டிருக்கிறது. முதல்வர் மமதா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியில் 2016-ல் பார்த்தா சட்டர்ஜி கல்வி அமைச்சராக இருந்தார். அப்போது பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள் நியமனத்தில் மிகப் பெரும் ஊழல் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது. இந்த ஊழல் புகாரில் பார்த்தா சாட்டார்ஜி அண்மையில் கைது செய்யப்பட்டார்.

மேலும் பார்த்தா சாட்டர்ஜிக்கு மிக நெருக்கமான அர்பிதா முகர்ஜியும் சிக்கினார். அவருக்கு சொந்தமான பங்களாக்களில் இருந்து ரூ.28 கோடி ரொக்கம், தங்க நகைகளை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்து அதிர வைத்தனர். ஆனால் இவை அனைத்தும் தம்மை சிக்க வைக்க நடந்த சதி என புலம்பி இருந்தார் பார்த்தா சாட்டர்ஜி.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏக்களான இர்பான் அன்சாரி, ராஜேஷ், நாமன் பிக்ஸால் கோங்காரி ஆகியோர் பயணம் செய்த கார் ஒன்றில் இருந்து பெருமளவு பணத்தை அம்மாநில போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த பணத்தை எண்ணுவதற்காக கவுண்ட்டிங் மெஷின்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.
இச்சம்பவம் தொடர்பாக ஹவுரா போலீஸ் அதிகாரி ஸ்வாதி பங்காளியா கூறுகையில், கார் ஒன்றில் பெருமளவு பணம் எடுத்துச் செல்லப்படுவதாக தகவல் கிடைத்தது. அதனால் அந்த காரை நிறுத்தி சோதனை நடத்தினோம். கவுண்ட்டிங் மெஷின் மூலம் பணம் எண்ணப்பட்டு பின்னர்தான் எவ்வளவு கிடைத்தது என சொல்ல முடியும் என்றார்.
ஜார்க்கண்ட் பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ராஜேஷ் தாகூர் கூறுகையில், பாஜக அல்லாத அரசுகளை கவிழ்ப்பதில் தீவிரம் காட்டுகின்றனர். இது நீண்டகாலம் நடைபெற்று வருகிறது. மகாராஷ்டிரா ஆட்சி எப்படி கவிழ்க்கப்பட்டது என்பதை அனைவரும் பார்த்து கொண்டிருந்தனர். தற்போது ஜார்க்கண்ட் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களிடம் பணம் சிக்கி இருப்பதன் பின்னணியிலும் பாஜகதான் இருக்கிறது என்றார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா- காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் பாஜகவின் திரவுபதி முர்முவுக்கு ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆதரவு தெரிவித்தது. அத்துடன் தேர்தலின் போது காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் சிலரும் வாக்களித்தனர். இதனால் ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆட்சியை கவிழ்க்கும் சித்துவேலையை பாஜக தொடங்கிதாக கூறப்பட்டது. இந்த நிலையில் பெருந்தொகையான பணத்துடன் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் சிக்கியிருப்பது அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
"ஜெயிக்க வேண்டிய தேர்தல் இது.." கடும் கோபத்தில் ராகுல்! நள்ளிரவை தாண்டி.. என்ன நடந்தது -
காத்திருக்கும் எதிர்பாராத ட்விஸ்ட்.. கேரள தேர்தலில் இப்படியொரு சம்பவமா.! புதிய தேர்தல் சர்வே -
திமுகவில் அடுத்த விக்கெட்? காங்கிரசுக்கு தந்த சீட்டால் வினை.. தமிழகத்தில் கனவாகும் ஸ்வீப் சக்சஸ் -
சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் இல்லை? காங்கிரஸில் புது பஞ்சாயத்து! அப்போ செல்வப்பெருந்தகைக்கு? -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா?












Click it and Unblock the Notifications