மே.வங்கத்தில் ஷாக்..இந்தியன் ஆயில் சுத்திகரிப்பு ஆலையில் பயங்கர தீ விபத்து..மூவர் பலி,பலர் படுகாயம்
கொல்கத்தா: மே. வங்கத்தில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்கு சொந்தமான சுத்திகரிப்பு ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 3 பேர் பலி, மேலும், 40க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
மேற்கு வங்கத்தின் ஹல்டியா என்ற பகுதியில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்கு சொந்தமான சுத்திகரிப்பு ஆலை ஒன்று அமைந்துள்ளது.
இந்த சுத்திகரிப்பு ஆலையில் இன்று பிற்பகல் நேரத்தில் மிக பயங்கரமான தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

3 பேர் உயிரிழப்பு
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்கு சொந்தமான ஆலையில் ஏற்பட்ட இந்த அதிபயங்கர தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 40க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மோட்டார் ஸ்பிரிட் உற்பத்தி செய்யப்படும் டிஎச்டி என்ற பிளாக்கில் பிற்பகல் நேரத்தில் மணியளவில் இந்த தீவிபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த தீ விபத்து எதனால் ஏற்பட்டது என்பது குறித்துத் தெளிவாகத் தெரியவில்லை

ஷட் டவுன் பயிற்சி
இருப்பினும், ஆலையை ஷட் டவுன் செய்யும்போது செய்ய வேண்டிய பயிற்சிகள் நடந்த போது இந்த மோசமான விபத்து நிகழ்ந்ததாக ஆலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஹால்டியா சுத்திகரிப்பு ஆலையில் பல்வேறு பெரிய யூனிட்களை ஷட் டவுன் செய்து பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

44 பேர் படுகாயம்
MSQ யூனிட்டில் இது தொடர்பான பணிகள் நடைபெற்ற போது, 12.50 மணி அளவில் முதலில் சிறு விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 44 பேர் தீக்காயம் அடைந்துள்ளனர். மேலும், மூன்று பேர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளனர். தீ உடனடியாக அணைக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களுக்கு ஹால்டியா சுத்திகரிப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்" என்று கூறப்பட்டுள்ளது.

முதல்வர் இரங்கல்
இந்த விபத்தில் உயிரிழந்தோருக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "ஐ.ஓ.சி., ஹால்டியாவில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பான செய்தி கேட்டு வேதனை அடைந்தேன். மூன்று விலைமதிப்பற்ற உயிர்கள் பறிபோய்விட்டன, அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருடன் இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்கா கொல்கத்தா கொண்டு வரப்படுகின்றனர். காயமடைந்தோர் சிகிச்சைக்கு மேற்கு வங்க அரசு அனைத்து உதவிகளையும் செய்யும்" என்று தெரிவித்துள்ளார்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications