சிவலிங்கத்துக்கு ரத்த அபிஷேகம்.. கொடூரமாக 3 பேர் நரபலி.. ஆந்திர வனப்பகுதியில் ஒரு ஷாக் சம்பவம்
அமராவதி: ஆந்திரத்தில் ஒரு வனப்பகுதியில் பெண்கள் உள்பட 3 பேர் புதையலுக்காக நரபலி செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்படுவதால் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தின் தானக்கல்லுவில் உள்ள கொர்ட்டிகோட்டா கிராமம். இங்குள்ள வனப்பகுதியில் பழமையான சிவன் கோயில் உள்ளது. இங்கு அந்த கோயிலை புனரமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன.
இந்த நிலையில் திங்கள்கிழமை மதியம் சிவன் கோயில் அருகே 2 பெண்கள், ஒரு ஆண் உள்பட 3 பேர் கொலை செய்யப்பட்டு கிடப்பதை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்துவிட்டு போலீஸாருக்கு புகார் அளித்தனர்.

விசாரணை
தகவலறிந்து வந்த தானக்கல்லு போலீஸார் 3 பேருடைய உடல்களையும் கைப்பற்றி பிரதேச பரிசோதனைக்காக அனந்தபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது.

ஆதாரங்கள்
போலீஸார் நடத்திய விசாரணையில் சிவன் கோயிலில் உள்ள லிங்கத்திற்கு மனித ரத்தத்தால் அபிஷேம் செய்தால் புதையல் கிடக்கும் என்ற மூடநம்பக்கையின் காரணமாக இது போன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

ரெட்டி
பழமையான கொர்ட்டிகோட்டா சிவன் கோயிலில் புதையல் இருப்பதாக கூறுப்படுகிறது. இவர்கள் 3 பேரும் நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாாம் என தெரிகிறது. அப்போது அவர்கள் அதே பகுதியை சேர்ந்த ஹனுமம்மா, சத்யலட்சுமி, சிவராம் ரெட்டி என தெரியவந்துள்ளது.

பலி
கோயில் கட்டுமான பணியில் இருந்த அவர்கள் மூவரும் வேலை முடிந்த பிறகு அங்கேயே படுத்துறங்கியபோது இந்த கொலை நடந்துள்ளது. இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications