ஹைதராபாத்தில் தூண் இடிந்து விழுந்து 3 தொழிலாளர்கள் பலி: 4 பேர் படுகாயம்
ஹைதராபாத்: ஹைதராபத்தில் கட்டுமானப் பணியின் போது தூண் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் கட்டிட தொழிலாளர்கள் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஹைதராபாத் ஜவகர்லால் நேரு தொழில்நுட்பவியல் பல்கலைக்கழகம் அருகில் உள்ள குகட்பள்ளி, சி.பி.சி.ஐ.டி. காலனியில் வளைவு கட்டுமானப் பணி நடைபெறுகிறது. நேற்று மாலை 4 மணியளவில் பணி கட்டிட வேலை நடைபெற்றுக்கொண்டிருந்தபோது திடீரென தூண் ஒன்று இடிந்து விழுந்தது.

இதில் இடிபாடுகளில் சிக்கிய தொழிலாளர்கள் தர்மாராவ், நாகபூஷனம், ஜனார்த்தன் ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த சிலர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனனர். இந்த விபத்து தொடர்பாக கட்டுமான காண்ட்ராக்டர் சுபாஷ் மீது கே.பி.எச்.பி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், சம்பவ இடத்திற்கு பெருநகர நகராட்சி ஆணையர் சென்று பார்வையிட்டதுடன், இதுபற்றி விசாரணை நடத்தவும் உத்தரவிட்டார். திரைப்பட நகரில் கடந்த மாதம் 24-ம் தேதி கட்டுமானப் பணி நடைபெற்ற கட்டிடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications