சட்டீஸ்கர்: மனைவி, குழந்தையை கோடாரியால் வெட்டிக் கொன்ற குடிகாரன்
ராய்ப்பூர்: குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் மனைவி, மாமியாரையும், பச்சிளம் குழந்தையையும் கோடாரியால் வெட்டிக் கொலை செய்துள்ளான் ஒரு குடிகாரன்.
சட்டீஸ்கர் மாநிலத்தில் உள்ள சிறிய கிராமத்தில் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஹல்கே பால் என்ற அந்தக்குற்றவாளி சட்டீஸ்கரில் இருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கட்டாரா கிராமத்தில் தனது மனைவி ஜனக் பாய் உடன் வசித்து வந்தான். சம்பவ தினத்தன்று குடிபோதையில் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்படவே வீட்டிற்குள் இருந்த கோடாரியை எடுத்துவந்து மனைவியை வெட்டி சாய்த்தான்.
தடுக்க வந்த மாமியாரையும் கோடாரியால் வெட்டினால் ஆனாலும் ஆத்திரம் தீராமல் இரண்டு மாத குழந்தையையும் வெட்டினான். இதில் ஜனக் பாய் அதே இடத்தில் சுருண்டு விழுந்து உயிரிழந்தார். காயமடைந்த மாமியாரும் குழந்தையும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி மாமியார் உயிரிழந்தார்.
போலீசார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளி ஹல்கே பாலை கைது செய்தனர். இது குறித்து பேசிய ஜனக்பாயின் சகோதரர், கோவிந்தபால், தனது சகோதரிக்கு கடந்த ஆண்டுதான் ஹல்கே பாலுடன் திருமணம் நடைபெற்றது.
குடிகாரன் என்று தெரியாமல் திருமணம் செய்து கொடுத்துவிட்டோம். அதுவே என் சகோதரிக்கு எமனாக அமைந்துவிட்டது என்றார்.












Click it and Unblock the Notifications