3 ஆண்டுகளில் 310 ராணுவ வீரர்கள் தற்கொலை... ராஜ்யசபாவில் பதறவைத்த அமைச்சர்
கடந்த 3 ஆண்டுகளில் 310 இந்திய ராணுவ வீரர்கள் மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்று மத்திய இணையமைச்சர் சுபாஷ் பாம்ரே ராஜ்யசபாவில் தெரிவித்துள்ளார்.
டெல்லி: கடந்த 3 ஆண்டுகளில் 310 இந்திய ராணுவ வீரர்கள் மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மத்திய இணையமைச்சர் சுபாஷ் பாம்ரே ராஜ்யசபாவில் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டை காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்கள் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர். குடும்பத்தை பிரிந்து இருப்பது, தேவையான போது விடுமுறை கிடைக்காதது போன்றவை அவர்களின் மன அழுத்தத்தை அதிகரிக்கிறது. இது அவர்களை மரணம் வரை கொண்டு செல்கிறது.

இது தொடர்பாக ராஜ்யசபாவில் பேசிய அமைச்சர் சுபாஷ் பாம்ரே, " கடந்த 2014 ம் ஆண்டு முதல் இப்போது வரை இந்திய ராணுவத்தை சேர்ந்த வீரர்கள் 310 பேர் தற்கொலை செய்துள்ளனர். கடந்த 2014ம் ஆண்டில், 84 பேரும், 2015ம் ஆண்டில் 78 பேரும், 2016ம் ஆண்டில் 104 பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
இந்த ஆண்டில், சென்ற ஜூலை மாதம் வரை 44 பேர் தற்கொலை செய்துள்ளனர். இதனால் இந்திய ராணுவ அதிகாரிகள், வீரர்களின் மனஅழுத்தத்தை குறைப்பதற்கான மனோதத்துவ பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதன் மூலம் ராணுவ வீரர்களின் வீரர்களின் தற்கொலை எண்ணத்தை மாற்றி, அவர்கள் பணியில் சிறப்பாகச் செயல்படமுடியும் " என்று அவர் தெரிவித்தார்.
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
"போட்டோ, வீடியோக்காக ஆய்வு செய்யமாட்டேன்".. அட தவெகவில் இப்படியும் ஒரு அமைச்சரா! -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications