பெங்களூரில் கடந்த 5 வருடத்தில் ஐயாயிரம் குழந்தைகள் மாயம்.. என்னவாகிறார்கள் தெரியுமா?
பெங்களூர்: கடந்த ஐந்து வருடங்களில் பெங்களூரை சேர்ந்த 5473 குழந்தைகள் மாயமான நிலையில், அதில் 5116 குழந்தைகள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவலை காவல்துறை வெளியிட்டுள்ளது.
சமீபத்தில் பெங்களூர் ஸ்ரீராமபுரத்தை சேர்ந்த புஜிதா என்ற 13 வயது, 7ம் வகுப்பு படிக்கும் சிறுமி மாயமாகி சமூக வலைத்தளங்களில் சிறுமி போட்டோ வைரலாகியது. அதிருஷ்டவசமாக அச்சிறுமி ஹூப்ளியில் கண்டுபிடிக்கப்பட்டார்.
ஆனால், இதேபோல சிறுமிகள் மாயமாகும் சம்பவம் இப்போதில்லை.. வெகுகாலமாக தொடர்வதாக பெங்களூர் போலீஸ் புள்ளி விவரம் கூறுகிறது. 2011ம் ஆண்டுக்கு பிறகு இதுவரை பெங்களூரை சேர்ந்த 3 ஆயிரத்து 515 சிறுவர்கள் மாயமாகியிருந்தனர். 1958 சிறுமிகளும் காணாமல் போயிருந்தனர்.

ஆகமொத்தம், 5473 குழந்தைகள் மாயமான நிலையில், அதில் 5116 குழந்தைகள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். கண்டுபிடிக்கப்படாத 356 குழந்தைகளில், 101 சிறுமிகளும், உள்ளடக்கம்.
அதேநேரம், 2011ம் ஆண்டை ஒப்பிட்டால் கடந்த ஆண்டில் குழந்தைகள் மாயமாவது வெகுவாக குறைந்தது. பெற்றோருக்கு ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு இதற்கு முகக்கிய காரணம். பெற்றோர் தங்கள் குழந்தைகள் மீது ஒரு கண் வைத்துக்கொண்டால் இதுபோன்ற சம்பவங்களை தடுக்க முடியும் என்பது போலீஸ் அட்வைஸ்.
படிப்பில் நெருக்கடி, பெற்றோர் திட்டுவது, காதலித்து ஜோடியுடன் ஓடிப்போவது ஆகியவை குழந்தைகள் மாயமாக முக்கிய காரணம். பல பெற்றோர் சமூக கேலிக்கு பயந்து புகார் கொடுக்க தயங்குவதும் அக்குழந்தைகளை கண்டுபிடிக்க முடியாமல் போவதற்கு காரணமாக அமைகிறது. பஸ், ரயில் நிலையங்களுக்கு தப்பியோடும் இதுபோன்ற குழந்தைகளை, கூலி வேலை, ஹோட்டல் வேலைக்கு நைசாக பேசி அழைத்து செல்லும் கும்பல்களும் பெங்களூரில் பெருகிவிட்டன. பிச்சைக்காரர்களிடம் சிக்கி சிக்னல்களில் பிச்சையெடுக்கும் அவலமும் நிகழ்கிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications