டெங்கு காய்ச்சலால் மும்பையில் 4000 பேர் பாதிப்பு – மாநகராட்சி தகவல்!

Subscribe to Oneindia Tamil

மும்பை: மும்பையில் கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் சுமார் 4000 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கையில், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகமானவர்களுக்கு டெங்கு தாக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதாக கூறியுள்ளனர்.

இந்நிலையில் பரேல் பகுதியில் உள்ள கே.இ.எம் மருத்துவமனை வளாகத்தில் தங்கியிருந்த 5 மருத்துவர்களுக்கு டெங்கு பாதித்துள்ளது.

கேள்விக்குறியான சுகாதார முறைகள்:

இது மருத்துவமனை வளாகத்தில் கடைபிடிக்கப்படும் சுகாதார முறைகளை கேள்விக்குறியாக்கியுள்ளது.

மருத்துவர்களுக்கு டெங்கு பாதிப்பு:

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள தகவலில், கே.இ.எம் மருத்துவமனை வளாகத்தில் தங்கியிருந்த ஐந்து மருத்துவர்களுக்கு டெங்கு பாதிப்பு உள்ளது.

ஒருவர் உடல்நிலை கவலைக்கிடம்:

அவர்களில் வருஜ் துர்கே எனும் மருத்துவரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், பிற நான்கு மருத்துவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெங்கி சிகிச்சை:

மேலும் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் மருத்துவமனை வளாகத்தில் தங்கியிருந்த சுமார் 7 மருத்துவர்கள் டெங்கு சிகிச்சை மேற்கொண்டு டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

50 பணியாளர்கள் பாதிப்பு:

கடந்த 2 மாதங்களில் இதே மருத்துவமனை வளாகத்தில் தங்கி வரும் சுமார் 50 பணியாளர்களுக்கு டெங்கு பாதிப்பு இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+