மீட்பு பணி தோல்வி.. சியாச்சின் பனிச்சரிவில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் உட்பட 6 பேர் பலி.. பரிதாபம்!
ஜம்மு காஷ்மீரின் சியாச்சின் பனிமலைப்பகுதியில் பனிச்சரிவில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் உட்பட 6 பேர் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் சியாச்சின் பனிமலைப்பகுதியில் பனிச்சரிவில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் உட்பட 6 பேர் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவின் பாதுகாப்பில் மிக முக்கியமான பகுதியாக திகழ்வது சியாச்சின். சியாச்சினில் இருக்கும் வடக்கு க்ளாசியர் பகுதி 18,000 அடி உயரமானது. இங்கு ராணுவ வீரர்கள் முகாமிட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவார்கள்.

அதேபோல் மிக குறைந்த அளவில் இங்கு சுற்றுலா பயணிகள் செல்வதும் வழக்கம். அங்கு தற்போது மைனஸ் 30 டிகிரிக்குக் கீழே வெப்பநிலை நிலவி வருகிறது. இங்கு பலமுறை ராணுவ வீரர்கள் பனிச்சரிவில் சிக்கி பலியாகி உள்ளனர். கடந்த 2016ம் ஆண்டு பிப்ரவரி மாதம், க்ளாசியர் பகுதியில், ஏற்பட்ட பனிச்சரிவால், 10 ராணுவ வீரர்கள், உயிரிழந்தனர்.
இந்த நிலையில் நேற்று சியாச்சின் வடக்கு பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் தங்கியிருந்த முகாம் அருகே பனிச்சரிவு ஏற்பட்டது. நேற்று திடீரென மதியம் 3 மணியளவில், பனிச்சரிவு ஏற்பட்டது.
இதனால் அங்கிருந்த பயணிகள் மற்றும் ராணுவ வீரர்கள் பனிச்சரிவில் சிக்கினார்கள். 4 ராணுவ வீரர்கள் உட்பட 8 பேர் பனிச்சரிவிற்குள் சிக்கினார்கள். இவர்களை மீட்கும் பணி இரவு முழுக்க நடந்தது. இந்த நிலையில் சியாச்சின் பனிமலைப்பகுதியில் பனிச்சரிவில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் உட்பட 6 பேர் பலியானார்கள்.
இவர்களின் உடல் இன்று அதிகாலை மீட்கப்பட்டது. இன்னும் இரண்டு பேரை மீட்பு படையினர் தீவிரமாக தேடி வருகிறார்கள். மீட்பு பணிகள் விரைந்து நடைபெற்று வருகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications