ஷாப்பிங் மால் சுவர் இடிந்து விழுந்து 4 பேர் படுகாயம்... பெங்களூருவில் பரபரப்பு
பெங்களூருவில் ஷாப்பிங் மாலில் உள்ள சுவர் இடிந்து விழுந்தது. இதில் 4 பேருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு: மந்திரி மால் என்ற ஷாப்பிங் மாலின் பின்பக்க சுவர் இடிந்து விழுந்ததில் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ளது மந்திரி மால். இந்த கட்டடத்தின் 3ம் தளத்தில் இயங்கி வந்த உணவகத்தின் பின்பக்க சுவர் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது. இன்று பிற்பகலில் நடைபெற்ற இந்த சம்பவத்தில் மாலுக்கு வந்திருந்த 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஷாப்பிங் மாலின் சுவர் இடிந்து விழுந்ததால் அங்கு வந்திருந்தவர்கள் அனைவரும் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், இந்த மாலினையொட்டி செல்லும் மெட்ரோ ரயில் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.

மல்லேஸ்வரம் போலீசார், விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து சென்று சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும், தீயணைப்புத் துறையினரும் அங்கு உடனடியாகச் சென்று இடிபாடுகளை அகற்றி வருகின்றனர். சுவர் இடிந்து விழுந்தது ஏன் என்ற காரணம் இதுவரை தெரியவில்லை. இந்த விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.













Click it and Unblock the Notifications