சச்சின், ரேகா பதவிக்காலம் முடிவு... ராஜ்யசபாவுக்கு 4 புதிய எம்பிக்களை நியமித்தார் ஜனாதிபதி
சச்சின், ரேகா உள்ளிட்டோரின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து ராஜ்யசபாவுக்கு புதிய எம்பிக்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது.
Recommended Video

டெல்லி: சச்சின், ரேகா உள்ளிட்டோரின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து ராஜ்யசபாவுக்கு புதிய எம்பிக்கள் நியமனம் செய்யப்பட்டனர். அவர்களை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நியமித்தார்.
லோக்சபாவுக்கு தேர்தல் மூலம் உறுப்பினர்களை தேர்தல் ஆணையம் தேர்வு செய்து வருகிறது. அதேபோல் ராஜ்யசபாவுக்கு கட்சி சார்பில் உறுப்பினர்கள் நியமனம் செய்து வருகின்றனர். இதுமட்டுமல்லாமல் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் அறிஞர்கள், சாதனையாளர்கள், கலைஞர்கள், சமூக ஆர்வலர்கள், இலக்கியவாதிகள் என 12 பேரை எம்.பி.க்களாக நியமிக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் உண்டு.

அதன்படி 2012-ஆம் ஆண்டு கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், இந்தி நடிகை ரேகா, சமூக ஆர்வலர் அனு ஆகா, பழம்பெரும் வழக்கறிஞர் கே பராசரன் ஆகியோர் மாநிலங்களவை எம்பிக்களாக நியமிக்கப்பட்டனர். அவர்களது பதவிக்காலம் 6 ஆண்டுகள் இருந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் முடிவடைந்தது.
இவர்களுக்கு பதிலாக விவசாயிகள் சங்கத் தலைவர் ராம் ஷகல், எழுத்தாளர் ராகேஷ் சின்ஹா, சிற்பி ரகுநாத் மொஹபத்ரா, நடனக் கலைஞர் சோனல் மான்சிங் ஆகியோரை நியமனம் செய்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார். இவர்களின் பதவிக்காலம் 2024-இல் முடிவடையும்.
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம்












Click it and Unblock the Notifications