ஜம்மு ஹோட்டலில் தீவிபத்து: 4 பேர் பலி-11 பேர் படுகாயம்
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஜம்மு பஸ் ஸ்டாண்ட் அருகே செயல்பட்டு வரும் ஹோட்டல் ஒன்றில், இன்று அதிகாலை நிகழ்ந்த தீவிபத்தில், உடல் கருகி 4 பேர் பலியாயினர். 11 பேர் படுகாயமடைந்தனர்.
ஜம்மு நகரில் பேருந்து நிலையத்துக்கு அருகில் உள்ள ஹோட்டல் நீலத்தில் இன்று அதிகாலை தீவிபத்து ஏற்பட்டது. நள்ளிரவு ஹோட்டலின் கீழ்த் தளத்தில் வண்டிகளின் டயர்கள் சேகரித்து வைக்கப்பட்டிருந்த ஸ்டோர் ரூமில் இருந்து லேசாகப் பரவிய தீ பின்னர் புகைமூட்டத்துடன் மளமளவெனப் பரவியது. த
தகவல் அறிந்து அந்த இடத்துக்கு தீயணைப்பு வண்டிகள் விரைந்தன. தீயணைப்புத்துறையினர் துரிதமாக செயல்பட்டு தீயை கட்டுப்படுத்தினர்.
இந்த விபத்தில் 4 பேர் தீயில் கருகி பலியாயினர். காயமடைந்த 12 பேர் ஜம்மு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.மக்கள் நெருக்கடி மிகுந்த பகுதியில் நிகழ்ந்த தீவிபத்தால், அங்கு பரபரப்பு நிலவியது.












Click it and Unblock the Notifications