டெல்லியில் சாலை விபத்து.. நான்கு பளு தூக்கும் வீரர்கள் மரணம்
டெல்லியில் நடந்த சாலை விபத்தில் நான்கு பளு தூக்கும் வீரர்கள் மரணம் அடைந்துள்ளனர்.
டெல்லி: டெல்லியில் நடந்த சாலை விபத்தில் நான்கு பளு தூக்கும் வீரர்கள் மரணம் அடைந்துள்ளனர். இவர்கள் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்ட வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லியில் இருந்து சண்டிகர் நோக்கி பயிற்சி செய்வதற்காக 6 பளுதூக்கும் வீரர்கள் காரில் சென்று இருக்கிறார்கள். இவர்கள் கார் ஹரியானா அருகே பெரிய பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகி இருக்கிறது.

இந்த விபத்தில் திஹம் சந்த், சோரப், யோகேஷ், ஹரிஷ் ராய் ஆகிய நான்கு பளுதூக்கும் வீரர்கள் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தார்கள். இவர்கள் நான்கு பெரும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி இருக்கிறார்கள்.
இவர்களுடன் சென்ற ஷாக்சாம் யாதவ் மற்றும் ரோஹித் ஆகியோர் மோசன நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் ஷாக்ஷாம் யாதவ் சென்ற வருடம் மாஸ்கோவில் நடந்த பளு தூக்கும் போட்டியில் இந்தியா சார்பாக தங்கம் வென்றவர் ஆவார்.
தற்போது மரணம் அடைந்த நால்வரின் உடலும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது. ஷாக்சாம் யாதவ் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.












Click it and Unblock the Notifications